
Entertainment News
காலம் போன காலத்துல குட்டப் பாவாடையா?!.. பிரியாமணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்…
தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. பாரதிராஜாதான் இவரை அறிமுகப்படுத்தினார். அமீர் இயக்கத்தில் இவர் நடித்த பருத்திவீரன் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாகும்.
இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்றார்.
முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார். எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், குட்டப்பாவடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், ரசிகர்களில் சிலர் ‘காலம் போன காலத்துல குட்டப் பாவாடையா?’ என கிண்டலடித்து வருகின்றனர்.