விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வெண்ணிலாவாக நடித்து வருபவர் பிரியங்கா குமார். இந்த சீரியலில் படிப்பை முடித்து விட்டு துணிச்சலான பெண்ணாக வாழ்க்கை பிரச்சனைகளை சந்திக்கும் பெண்ணாக அசத்தி வருகிறார்.

Also Read
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் மைசூரில் பிபிஏ படிப்பை நிறைவு செய்து தற்போது முழுநேரம் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் முதல் சீரியல் பயணம் கன்னட சீரியல் கிருஷ்ணா.
அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்தார். அப்போது தான் சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சாக்லேட்’ சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேறு ரகம். அசத்தலான கவர்ச்சியில் ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

இந்நிலையில், அல்ட்ரா மாடர்ன் கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




