More
Categories: Cinema News latest news

படுத்துக்கிடந்து எச்சில் துப்பினது யாரு? ராதிகாவைப் பொளந்து கட்டிய பயில்வான்!

சமீபத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் பற்றிய பேச்சு தான். மலையாளத் திரையுலகில் நடந்த அந்த விஷயத்திற்காக அமைக்கப்பட்டது ஹேமா கமிட்டி. இந்த அறிக்கை தான் இவ்வளவு மேட்டரையும் பேச வைத்துள்ளது.

Also read: மம்மூட்டி வச்சு வொர்க் அவுட் ஆகல.. நயன் வந்ததும் ஹைப் ஏறிருச்சு! அதான் லேடி சூப்பர்ஸ்டார்

Advertising
Advertising

கேரளாவில் கொண்டு வந்த ஹேமா கமிட்டி பற்றி நிருபர் கேட்கையில் பலமாக சிரித்தார் பயில்வான் ரங்கநாதன். இவர் தொடர்ந்து பேசுகிறார். இவ்ளோ பெரிய மேட்டரைப் பேசுறீங்க. நான் ஏன் சிரிக்கிறேன்னு தெரியுதா? இந்த ஹேமா கமிட்டில இடம்பெற்று இருக்கிறவர் நடிகை சாரதா.

இவங்க தெலுங்கானால எம்பியா தேர்ந்தெடுக்கப்பட்டாங்க. இவங்க நேத்து பேட்டி கொடுத்துருக்காங்க. 2 வருஷமாச்சுங்க. ஒண்ணும் நடக்காது. இது ஒரு ஷோ அவ்வளவு தான். இதைப் பத்திப் பேசாதீங்க. திரும்பவும் வயநாடு இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுங்கன்னு சொன்னாங்க.

ஹேமா கமிட்டி அறிக்கைக் கொடுத்த உடனே எல்லாரையும் பிடிச்சி தூக்குல போட்டுருவாங்களா? இது இப்போ திடீர்னு ஏன் வெளியிட்டாங்கன்னா வயநாடு நிலச்சரிவு மேட்டரை மறைக்க. அந்தப் பேச்சை எல்லாம் திசை திருப்பத் தான்.

ராதிகா தான் பாலியல் பலாத்காரத்தைப் பத்தி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க நாக்குல ஏழரை சனி புகுந்து விட்டது. கேரளா சூட்டிங்ல கேரவன்ல நடந்ததைப் பத்தி சொல்லிட்டாங்க. அவங்க அந்த உடனேயே யாரு கேமரா வச்சிப் பார்த்தாங்கன்னு பார்த்து நாலு அறை அறைஞ்சா அப்பவே பிரச்சனை முடிஞ்சிடும். ஆனா இதை இப்ப வாயைத் திறந்துருக்காங்க.

Also read: நடிகையின் உள்ளங்கையை சுரண்டிய இயக்குனர்… பரதேசி வேதிகாவுக்கு நடந்தது மட்டும்… எனக்கு நடந்தா?

இப்போ கேரளா போலீஸ் ராதிகா மீது விசாரணை போட்டாங்க. உடனே ராதிகா நான் பேருலாம் சொல்ல மாட்டேன்னு அந்தர்பல்டி அடித்து விட்டார். துணிச்சலும், திரானியும் இருந்தால் ராதிகா யார் யாரைப் பார்த்து சிரிச்சான்னு சொல்லட்டும். சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்க.

நான் சொன்னா படுத்துக்கிடந்து எச்சில் துப்பின மாதிரி ஆகிடும்னு சொன்னாங்க. இப்ப மட்டும் என்னாச்சு? அதான நடந்துருக்கு. உங்களுக்கு சோறு போட்ட தொழில்ல மோசமா நடக்குதுண்ணு நீங்களே இப்படி சொல்வீங்க. புகார் சொல்லத் தெரியுது. சாட்சி சொல்லத் தெரியலையே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v