Connect with us
ranjitha

Cinema News

கவுத்துப் புட்டீயே ரஞ்சிதமே! கைலாசத்தில் இப்படி ஒரு பதவியா? ஒரே ஜலபுலா ஜங் தான்

ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்டவர் நடிகை ரஞ்சிதா. சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட ரஞ்சிதாவுக்கு தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் அந்தப் படம் சரிவர போகவில்லையாம். இயல்பாகவே ஆண் போன்ற தோற்றம் கொண்ட ரஞ்சிதாவின் குரல்வளம் படத்துல ரம்மியமா இருக்கும். இந்த நிலையில் தான் பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பிறகு கார்த்திக்கை வைத்து நாடோடித் தென்றல் என்ற படத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

ranjith1

ranjith1

பாரதிராஜாவால் கிளிக் செய்த நடிகை

அந்தப் படத்தில் பொற்கொல்லரான கார்த்திக்கு ஜோடியான ஒரு வாத்து மேய்க்கிற பெண் ஜோடியாவது மாதிரியான கதை. அந்த கதாபாத்திரத்தில் ஒரு கிராமத்து பெண் போன்ற தோற்றத்தில் நடிகையை தேடுகிறார் பாரதிராஜா. அந்த சமயத்தில் தான் தெலுங்கில்  ரஞ்சிதா நடித்த ஒரு படத்தின் காட்சி புகைப்படத்தை பார்க்கிறார். பார்த்ததுமே இவர்தான்  நம் அடுத்த ஹீரோயின் என முடிவு செய்து கோடம்பாக்கத்திற்கு அழைத்துவருகிறார் பாரதிராஜா.

இதையும் படிங்க : வீட்டுக்கு வெளியே எப்போதும் இளம் பெண்கள்!.. ஜெமினி கணேசன் மகள் சொன்ன ஷாக்கிங் அப்டேட்!..

அந்தப் படத்தில் ஜாக்கெட் போடாமல் வெறும் புடவையை கட்டிக் கொள்ளும் மாதிரியான காஸ்ட்யூம். இதைக் கொடுத்ததுமே ரஞ்சிதா எப்படி ஜாக்கெட் இல்லாமல் கட்டுவது என அழுதாராம். இருந்தாலும் பாரதிராஜாவை பற்றி பல பேர் புகழ்ந்து கூற அதன் பிறகு தான் நடிக்க ஒப்புக் கொண்டாராம். முதல் படம் அந்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும் பாரதிராஜாவின் அறிமுகம்னா சும்மாவா? ரஞ்சிதாவை கோடம்பாக்கம் நல்ல முறையில் வரவேற்றது.

ranjitha2

ranjitha2

க்ளாமரில் சக்க போடு போட்ட நடிகை

தொடர்ச்சியாக பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஜாக்கெட் இல்லாமல் எப்படி நடிப்பது என கேட்ட ரஞ்சிதாதான் ஒரு கட்டத்தில் ‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு’ என்ற பாடலுக்கு மிகவும் க்ளாமராக ஆடி ரசிகர்களின் மனதை  கொள்ளை கொண்டார். இந்த பாடலில் அர்ஜுனுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடிய ரஞ்சிதா மீண்டும் அதே அர்ஜுனுடன் மலரே மௌனமா என்ற மெலடி பாடலுக்கும் டூயட் பாடினார்.

ஒரு கட்டத்தில் சொந்த வாழ்க்கையில் பிரச்சினையாகி ஏண்டா இந்த சினிமாவிற்குள் வந்தோம் என்ற விரக்தியில் 2000 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் இரண்டு வருடத்தில் அவர்கள் திருமண உறவு முறிவுக்கு வந்ததாம். அதன் பிறகு கேரக்டர் ரோல், அக்கா ரோல் என நடித்துக் கொண்டிருந்த ரஞ்சிதாவுக்கு இது பிடிக்கவில்லையாம்.

ranjith3

ranjith3

பூகம்பத்தை ஏற்படுத்திய வீடியோ

அப்படியே சினிமாவிற்கு முழுக்கு போட்டிருக்கிறார். திடீரென ஒரு வீடியோ வெளியாகி பெரிய பூகம்பத்தையே கிளப்பியது. அந்த வீடியோவிற்கு பிறகு தான் யார் இந்த ரஞ்சிதா என 2கே கிட்ஸ் கூகுளில்  தேட ஆரம்பித்தனர். நித்தியானந்தாவுடன் இருக்கும் அந்த வீடியோ மிகவும் வைரலானது. ஆரம்பத்தில் இவையெல்லாம் மார்ஃபிங் என மறுத்து வந்த ரஞ்சிதா ஒரு கட்டத்தில் ஆமா.. இதுல என்ன தப்பு என்கிற மாதிரி மிகவும் கெத்தாக சுத்த ஆரம்பித்தார்.

இதையும் படிங்க : சாவித்திரியை பார்க்க இப்படி எல்லாம் பண்ணுவாரா? ஜெமினியை பற்றி இயக்குனர் ஸ்ரீதர் பகிர்ந்த சீக்ரெட்..

அதுமட்டுமில்லாமல் அந்த குரூப்பே ஒரு நேரத்தில் மாயமாக மறைந்தது. மறைந்ததோடு  மட்டுமில்லாமல் கைலாசாவில் அவர்களுக்கென ஒரு தனித்தீவை உருவாக்கி தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள். அந்த கைலாசாவிற்கு இப்போது பிரதமரே ரஞ்சிதாதானாம். அப்படி ஒரு பொறுப்பை கொடுத்து ராணியாக அமர வைத்திருக்கிறாராம் நித்தியானந்தா.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top