பாலுமகேந்திரா எதைச் செய்தாலும் என் வளர்ச்சிக்காகத் தான் செய்வார்… நடிகை ஓபன் டாக்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் மிகச்சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இன்று வரை எல்லா ரசிகர்களின் மனதிலும் நிறைந்துள்ளவர் தான் நடிகை ஷோபா. அதே சமயம் மிகச் சுமாரான படங்களிலும் அவர் நடித்துள்ளார். இதுபற்றி நிருபர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பதில் இதுதான்.

பாலசந்தர், பாலுமகேந்திரா படங்களில் பணியாற்றும்போது எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் இருக்கும். இந்தக் காட்சில நான் இப்படி நடிக்கலாமா என்று நான் அந்த இருவர்களிடமும் கேட்பேன். ‘நீ நடிச்சிக் காட்டும்மா எப்படி இருக்குன்னு பார்ப்போம்’னு சொல்வாங்க.

நான் நடிச்சிக் காட்டுனது ரொம்பப் பிடிச்சிருந்தா ‘அதே மாதிரியே நடி’ன்னு சொல்வாங்க. அந்த சுதந்திரம் எனக்கு இருந்தது. இந்த சுதந்திரத்தை எல்லா இயக்குனர்களிடமும் பெற முடியவில்லை.

சில படங்கள் உங்கள் மனதைக் கவர முடியவில்லை என்றால் அந்தப் போக்கும் ஒரு முக்கியமான காரணம். தனக்கும் பாலுமகேந்திராவுக்குமான நட்பு பற்றி அழுத்தம் திருத்தமாகவும் சொன்னார்.

Actress Shoba

சாதாரணமாக எந்த அடிப்படையிலே ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வீர்கள் என அந்த நிருபர் கேட்டார். சாதாரணமாக ஒரு படத்தின் கதையை நான், அம்மா, பாலுமகேந்திரா மூவரும் கேட்போம். அந்தக் கதை மூவருக்கும் பிடித்து இருந்தால் தான் நடிப்பேன். ஒரு வேளை பாலுமகேந்திராவுக்குக் கதை பிடிக்கலைன்னா அதில் நீங்க நடிக்க மாட்டீங்களான்னு அந்த நிருபர் கேட்டார்.

அதற்கு ‘நிச்சயமாக நடிக்க மாட்டேன். ஏன்னா பாலுமகேந்திரா எதைச் செய்தாலும் என் நன்மையைக் கருதித் தான் செய்வார். என் வளர்ச்சியை மனதில் வைத்துத் தான் செய்வார்’ என ‘பளிச்’சென்று பதில் சொன்னார் ஷோபா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

வேலி தாண்டிய வெள்ளாடு, அன்புள்ள அத்தான், பசி, மூடுபனி, அழியாத கோலங்கள் உள்பட பாலுமகேந்திரா இயக்கிய பல படங்களில் ஷோபா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலுமகேந்திராவைத் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் தனது 17வது வயதில் தற்கொலை செய்து கொண்டது திரை உலகையே உலுக்கியது.

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago