Connect with us
vijay

Cinema News

சிம்ரனுக்கு திடீரென வந்த விபரீத ஆசை!.. அட்வைஸ் சொல்லி அனுப்பி விஜய்!…

சினிமா உலகில் ஒரு படத்தை தயாரிப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. பணம் இருந்தால் மட்டும் போதாது. படத்தை எடுத்து முடிக்க நேக்கு போக்கு தெரிய வேண்டும். படத்தின் கதாநாயகனை அனுசரித்து வேலை வாங்க தெரிந்திருக்க வேண்டும். கதாநாயகிகள் கொடுக்கும் அட்ராசிட்டிகளை சமாளிக்க வேண்டும். படத்தின் பட்ஜெட் சொன்னதை விட அதிகரித்தால் சமாளிக்க வேண்டும்.

படத்தை முடித்து சிக்கல் இல்லாமல் வெளியிடும் திறமை வேண்டும். ரிலீசுக்கு முதல் நாள் பழைய கடன் பிரச்சனை பூதாகரமாக வந்தால் அதை பேசி சுமூக முடிவை எட்ட வைத்து படத்தை வெளியிட வேண்டும். கணக்கு, வழக்குகளை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது.

இதையும் படிங்க: ஒருவரியில் கதை சொன்ன லோகேஷ்… நிறுத்துங்க.. ஷாக் கொடுத்த சீனியர் நடிகர்…

சினிமாவில் பல வருடங்களாக படமெடுத்து வருபவர்களுக்கு இது தெரியும். ஆனால், புது தயாரிப்பாளர் என்றால் அவ்வளவுதான். தடுமாறி விடுவார். தலையில் மிளகாய் அறைத்துவிடுவார்கள். சினிமா தயாரித்து நஷ்டமாகி வீடு, வாசலை இழந்து நடுரோட்டுக்கு வந்த பலரும் இருக்கிறார்கள்.

அதனால்தான் பெரிய ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பார்கள். இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்களை லைக்கா, ஏஜிஎஸ், சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களே தயாரிக்கிறது. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் படத்தை கூட ஏஜிஎஸ் நிறுவனமே தயாரித்திருந்தது.

vijay

#image_title

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருக்கிறது. விஜயின் சம்பளமே 200 கோடியாக மாறியிருக்கிறது. இந்நிலையில்தான், நடிகை சிம்ரனுக்கு விஜயை வைத்து ஒரு படம் தயாரிக்கும் ஆசை வந்திருக்கிறது. தனது ஆசையை அவர் விஜயிடம் சொல்ல அதிர்ந்து போன விஜய் ‘என் படம் என்றாலே ரிலீஸ் ஆவதில் பல சிக்கல் வரும். எந்த பக்கம் இருந்து பிரச்சனை வரும் என சொல்லவே முடியாது’.

உங்களால் அதை சமாளிக்கவே முடியாது. எனவே, இந்த பட தயாரிப்பு எல்லாம் வேண்டாம். மகிழ்ச்சியா இருங்கள்’ என் கூலாக சொல்லி அனுப்பிவிட்டாராம். விஜய் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாழை ‘OTT’ ரிலீஸ் தேதி இதுதான்!

google news
Continue Reading

More in Cinema News

To Top