துபாயில் செட்டிலான தமிழ் குடும்பம் சினேகாவுடையது. மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே அம்மணி சென்னை வந்தார். இவர் முதலில் நடித்தது ஒரு மலையாள திரைப்படத்தில்தான்.
அதன்பின் மாதவன் நடித்த என்னவளே படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். ஆனால், லிங்குசாமியின் இயக்கதில் அம்மணி நடித்த ஆனந்தம் திரைப்படம் சினேகாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
தாவணி பாவாடை மற்றும் சேலை அணிந்து கொண்டு குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்த சினேகா பல திரைப்படங்களில் அப்படியே நடித்தார்.
இதையும் படிங்க: இத ஜாக்கெட்டுன்னு சொன்னா எவன் நம்புவான்!.. ஆதி காலத்துக்கு போன ரேஷ்மா…
கடைசி வரைக்கும் கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகைகளில் சினேகா முக்கியமானவர். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைபப்டும் சினேகா விதவிதமான உடைகளில் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
அந்த வகையில் அவரின் ஃபேவரைட் புடவை உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஃபிளாட் ஆக்கியுள்ளது.
Rayan Movie:…
Shaalin Zoya:…
Actress Vichithra:…
ஊடகத்துறையில் இருந்து…
Bakkiyalakshmi: இன்றைய…