More
Categories: Entertainment News

சலிக்க சலிக்க பாத்தாலும் சலிக்காத அழகு!.. கட்டழகை நச்சின்னு காட்டும் சினேகா…

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை சினேகா. இவரின் நிஜப்பெயர் சுஹாசினி. மும்பையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர் இவர். மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்படவே வாய்ப்புகள் தேடினார்.

Advertising
Advertising

ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மாதவன் நடித்த என்னவளே என்கிற படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், உன்னை நினைத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

விரும்புகிறேன், ஆனந்தம் ஆகிய படங்கள் சினேகாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. கவர்ச்சி காட்டாமல் புடவை, சுடிதார் மற்றும் பாவாடை தாவணி அணிந்த அழகான கதாநாயகி எனில் இயக்குனருக்கு சினேகாதான் நினைவுக்கு வந்தார்.

அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். விஜய், விக்ரம், சூர்யா, கமல் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. திருமணத்திற்கு பின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார்.

தற்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் ஆசை வந்துவிட்டதா என தெரியவில்லை. கட்டழகை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், மஞ்சள் நிற புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து சினேகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts