தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. தன் நடனம் மூலமே தனி அடையாலத்தை பெற்றவர் இவர். திரையுல்கிற்கு வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டவர் இவர். தெலுங்கு மட்டுமின்றி தமிழில் பராசக்தி மூலம் அறிமுகம் ஆனார். தற்போது தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேசிய ஸ்ரீலீலா கூறியபோது,
சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வந்த தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் காயப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் என்னை மிகவும் பாதித்தன. ஒரு கட்டத்தில் இந்த ஆன்லைன் ட்ரோலிங்கை பார்த்து எனக்கு பயமே வந்துவிட்டது. இதனால் எனக்குக் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. இந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இனிமேல் எதற்கு நடிக்க வேண்டும், பேசாமல் சினிமாவையே விட்டு முற்றிலுமாக விலகிவிடலாம் என்று கூட நான் யோசிக்கும் அளவிற்கு சென்றேன் என மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தக் கடினமான சமயத்தில், மனநலப் பாதுகாப்பு எனக்குப் பெரும் உதவியாக இருந்தது. அதோடு, எனது நெருங்கிய நண்பர்களின் அன்பும், இடைவிடாத ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.





