Connect with us
vijay

Cinema News

10 வருஷத்துக்கு பிறகு இது நடந்திருக்கு.. ஒன்னு ஒன்னா வரும்.. விஜயை பற்றி எஸ்.ஏ.சி கூறிய ரகசியம்..

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். அது மட்டும் இல்லாமல் ரஜினிக்கு அடுத்தபடியாக ஒரு வசூல் மன்னனாகவும் திகழ்கிறார். விஜயின் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே பல கோடி தொகைகளில் விளம்பரங்கள் நடத்தப்பட்டு விடுகின்றன.

அந்த அளவுக்கு தன்னை ஒரு முழு ஸ்டாராக உருவாக்கி இருக்கிறார் விஜய். அதற்கு முழுமுதற் காரணமாக திகழ்பவர் அவருடைய தந்தை சந்திரசேகர். ஆரம்பத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்காக ஒரு சில படங்களில் நடிக்க வைத்தார் அவருடைய தந்தை.

அந்தப் படங்களில் விஜயின் நடிப்பை பார்த்து மிரண்டு போன அவருடைய தந்தை சந்திரசேகர் அவரின் இயக்கத்திலேயே பல படங்களை இயக்கினார். மாணவன்,ரசிகன் போன்ற ஒரு சில படங்களை இயக்கியதின் மூலம் விஜய் ஒரு நடிகர் என தமிழ் சினிமா ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்து விஜயை இன்னும் ஒரு முழு ஸ்டாராக உருவாக்க வேண்டும் என பல இயக்குனர்களிடம் விஜய்க்காக சந்திரசேகர் படியேறினார்.

அதன் விளைவாக அமைந்த படங்கள் தான் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை ,பகவதி போன்ற பல படங்கள். இப்படி விஜயின் படிப்படியான வளர்ச்சிக்கு ஒரு ஏணிப்படியாக இருந்தவர் அவருடைய தந்தை சந்திரசேகர். இந்த நிலையில் சமீப காலமாக விஜயும் அவருடைய தந்தை சந்திரசேகரும் மனக்கசப்பு காரணமாக பேசாமல் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட விஜயின் பெற்றோர்களின் 50வது திருமண நாளை முன்னிட்டு அவர்களுடைய வீட்டிற்கு சென்று அவருடைய தாய் சோபாவை சந்தித்து புகைப்படங்கள் எடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார் விஜய். அந்தப் புகைப்படங்கள் மிகவும் வைரலானது .அதை பார்த்து ஊடகங்கள் பல கேள்விகளை எழுப்பினர்.

அதாவது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்ட விஜய் ஏன் சந்திரசேகருடன் மட்டும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதைப் பற்றி சமீபத்தில் கூட ஒரு நிருபர் சந்திரசேகரிடம் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த எஸ்.ஏ. சந்திரசேகர் ‘தப்பு செய்தால் ஊடகங்கள் கேள்விகள் கேட்கலாம் அதே நேரத்தில் ஏதாவது மகிழ்ச்சிகரமான செய்திகள் நடந்தாலும் அதைப்பற்றி கேட்கலாம். என் மகன் பத்து வருடங்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளான். அதுவே எங்களுக்கு இப்போதைய மகிழ்ச்சிகரமான செய்தி. அதைப் பற்றி எந்த ஊடகமாவது செய்தியை வெளியிட்டதா?.. இல்லை. தாயுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை பற்றி கூறுகிறீர்கள். அதைப்போல நிறைய புகைப்படங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொன்றாக வெளிவரும்’ என கூறினார்.

இதையும் படிங்க : மணிரத்னத்தை கால் கடுக்க காக்க வைத்த பாலச்சந்தர்!… ஆனா அதுக்கப்புறம் நடந்ததுதான் சம்பவமே!

google news
Continue Reading

More in Cinema News

To Top