மிலன் மறைவுக்கு பிறகு அவருக்காக ‘விடாமுயற்சி’ டீம் செய்த மிகப்பெரிய செயல்! வேற லெவலில் ரெடியாகும் தல

Vidamuyarchi: நடிகர் அஜித் நடிப்பில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு. மகிழ்திருமேனி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பது விடாமுயற்சி திரைப்படம். ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர் போனவர் மகிழ்திருமேனி.

அஜித்துடன் கூட்டணி என்பது கண்டிப்பாக படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நீண்ட இழுபறிக்கு பிறகு இப்பொழுதுதான் படம் முழு மூச்சுடன் தயாராகிக் கொண்டு வருகிறது. படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: மாறி மாறி முத்தம் கொடுத்துக்கிறாங்களே! கடும் சர்ச்சைக்குள்ளான நடிகையின் புகைப்படங்கள்

படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் நடிகை த்ரிஷா மற்றும் ரெஜினா என இரு ஹீரோயின்கள் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அது மொத்த படக்குழுவையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. மிலன் அஜித்தின் நெருங்கிய நண்பரும் ஆவார். அதுமட்டுமில்லாமல் கலை இயக்குனர் மிலன் நயனின் மண்ணாங்கட்டி திரைப்படத்திற்கும் கலை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: தீபாவளி ரேஸில் கமல், ரஜினியை முந்திய பிரபல நடிகர்.. ஆனா இப்போ அவருக்கு அப்பா சான்ஸ் கூட இல்லையாம்..!

இந்த நிலையில் அவர் மறைவுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டது விடாமுயற்சி டீம். மிலனுக்கு மரியாதை செலுத்து விதமாக அவரின் மனைவி மரியா மெர்லின் விடாமுயற்சி படத்தில் கலை இயக்குனராக பணியாற்ற இருப்பதாக ஒரு சில தகவல் பரவுகிறது.

மேலும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ஹாலிவுட் தரத்தில் தயாராக இருப்பதால் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அஜர்பைஜானிலேயே நடத்தப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அடுத்தவன பத்தி தெரியலனா உங்க வேலையா பாருங்க!… சிவகார்த்திகேயனுக்காக வரிஞ்சிகட்டும் சீரியல் நடிகர்…

 

Related Articles

Next Story