அச்சச்சோ!.. யாஷிகா ஆனந்த்தை தொடர்ந்து ஜி.பி. முத்து காரும் விபத்துல சிக்கிடுச்சாம்.. என்ன ஆச்சு?

விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் பிரபலங்கள் தொடர்ந்து கார்களை வாங்கி வீடியோக்களாக போட்டு வரும் நிலையில், பல கண்களும் அவர்கள் மீது படத் தொடங்கி விடுகின்றன.

நடிகை யாஷிகா ஆனந்த் நைட் பார்ட்டி முடித்து விட்டு ஈசிஆர் ரோட்டில் புயல் வேகத்தில் வந்த போது டிவைடரில் மோதி நடந்த கொடூரமான விபத்தில் அவரது உயிர்த் தோழியே ஆன் தி ஸ்பாட்டில் உயிர் இழந்து பெரிய சோகமாக மாறி விட்டது. நடிகை யாஷிகா ஆனந்துக்கும் காலில் பலமாக அடிப்பட்டு பல தையல்கள் போட்டு பல மாதங்கள் எழுந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதையும் படிங்க: உன்கூட இருக்க ஒருத்தனையும் நம்பாதே!. கழுத்த அறுத்துருவானுங்க!. எம்ஜிஆரை எச்சரித்த எம்.ஆர்.ராதா

இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளரான ஜி.பி. முத்து புதிதாக புதிதாக வெள்ளை நிற கியா கார் வாங்கியதாக வீடியோ போட்டு அலப்பறையை கிளப்பி இருந்தார். யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்போது மதுரையில் அவரது கார் விபத்தில் சிக்கி உள்ளது.

ஆனால், அதிர்ஷடவசமாக யாருக்கும் எந்த அடியோ, காயமோ ஏற்படவில்லையாம். கார் தான் டோட்டல் டேமேஜ் ஆகி விட்டதாக எமோஷனலாகி வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது சோக கதையை சொல்லி இருக்கிறார் ஜி.பி. முத்து.

இதையும் படிங்க: பிரபாஸ் மிரட்ட காத்திருக்கும் சலார் படத்தின் கதை என்ன தெரியுமா?.. செம ட்விஸ்ட் வைத்த பிரசாந்த் நீல்!..

மதுரைக்கு சென்றுக் கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் பாலத்தின் மீது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை அறிந்து தனது காரை நிறுத்தியிருக்கிறார் ஜி.பி. முத்து. ஆனால், பின்னால் வந்த ஒரு கார் இந்த கார் பிரேக் போட்டு நிறுத்துவதை கவனிக்காமல் படு வேகமாக வந்ததில் ஜி.பி. முத்து காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

ஆக்ஸிடன்ட் பண்ண காரில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது? என்று துடித்துப் போய் பார்த்ததில் ஒரு கணவர், மனைவி, குழந்தை இருந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை. பேசி பிரச்சனையை தீர்க்க ஜி.பி. முத்துவும் அந்த நபரும் முயற்சி செய்யும் போது, வேடிக்கை பார்க்க கூடியவர்கள் பிரச்சனையை பெரிதாக்க முயற்சிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Related Articles

Next Story