Connect with us

Cinema News

பாண்டிச்சேரியில இருந்துட்டு விஜயகாந்த் மறைவுக்கு வர முடியாதா?.. பெரிய கும்பிடு போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!..

நியூ இயர் பார்ட்டியை பாண்டிச்சேரியில் கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கேப்டன் மறைவு செய்தி அறிந்து சென்னைக்கு கூட வர முடியாதா என சமீபத்தில் அவரது பேட்டியை பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

நாகர்கோயிலில் இருந்து ரஜினிகாந்த் ஃபிளைட் புடிச்சிட்டு வந்தாரு, ஹைதராபாத்தில் இருந்து விஜய்யும் இரவு நேரம் என்றும் பார்க்காமல் ஓடோடி வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கத்துல இருக்குற பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு வர முடியவில்லை என பேசுவது எல்லாம் சுத்த மோசடித்தனம் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க:  டப்பிங் முடிந்தது என நினைச்சு வெளிநாடு புறப்பட்ட கமல்! கடைசி நேரத்தில் அவருக்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா?

மேலும், விஜயகாந்த் குறித்த கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பிய நிலையில், தான் இப்போது நகை கடை திறப்பு விழாவுக்காக சென்னை வந்திருக்கிறேன்.இதை பற்றி மட்டும் கேளுங்க எனக் கூறியுள்ளார். விஜயகாந்த் பற்றிய கேள்விக்கு பெரிய கும்பிடு போட்டு பதில் சொல்ல முடியாது என்றும் தான் ஊரில் இல்லை. பாண்டிச்சேரியில் சுழல் 2 ஷூட்டிங்கிற்காக இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், சென்னை மற்றும் தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்த கேள்விக்கும் அதே பதிலைத்தான் சொன்னார். எல்லாரும் உதவி பண்றதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என்றும் அவரவர் விருப்பப்பட்டு செஞ்சாலே போதும் என்றும் நகை கடை திறப்பு விழா பற்றிய கேள்வியை மட்டும் கேளுங்க என கறாராக பேசி விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவு.. அஜித் போன் பண்ணியே பேசல!.. அதெல்லாம் சுத்த பொய்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்!..

அடுத்து என்ன படத்தில் நடிக்கிறீங்க என்கிற கேள்விக்கு இப்போதைக்கு சுழல் 2 வெப்சீரிஸ் மட்டும் தான் நடிச்சிட்டு இருக்கேன் என்றும் பதிலளித்துள்ளார். கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான அரை டஜன் படங்கள் எல்லாமே படுதோல்வியை சந்தித்த நிலையில், புதிய பட வாய்ப்புகள் இல்லையா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top