இனிமே இப்படி காட்டினாத்தான் வாய்ப்பு!.. தரலோக்கலா இறங்கி தவிக்கவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்...

Aishwarya rajesh: குடும்பத்தில் சிலர் ஏற்கனவே சினிமாத்துறையில் இருந்தார்கள் என்பதால் இவருக்கும் அந்த ஆசை வந்தது. துவக்கத்தில் நடனத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு தொலைக்காட்சிகளில் சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் மானாட மயிலாட நிகழ்ச்சியும் ஒன்று. அதன்பின் சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

aishwarya

பா.ரஞ்சித் முதன் முதலில் இயக்கிய அட்டக்கத்தி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் இவருக்கு ஒரு அழுத்தமான வேடம் கிடைத்தது. எனவே, 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தார். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது.

aishwarya

அதன்பின் விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் மற்ற ஹீரோக்களின் படங்களில் நடித்தார். ஆனால், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இப்போதுவரை அவருக்கு அமையவே இல்லை.

aishwarya

எனவே, தனக்கு கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவை பின்பற்றி அவரைப் போலவே பல படங்களிலும் கதையின் நாயகியாக நடிக்க துவங்கினார். கணவர் பெயர் ரணசிங்கம், தி கிரேன் இண்டியன் கிச்சன், கனா, ஃபாத்திமா, புலிமடா, சொப்பன சுந்தரி, திட்டம் இரண்டு என பல படங்கள் வெளிவந்தது.

aishwarya

சமீபகாலமாக, அவரின் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் ஓடவில்லை. எனவே, கவர்ச்சி உடைகளில் தூக்கலாக அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்தவகையில், சற்று தூக்கலான கவர்ச்சி காட்டி ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

aishwarya

 

Related Articles

Next Story