ஜாலியா பண்ணலாம்னு சொல்லி காலி பண்ணிட்டார்.. சொப்பன சுந்தரி படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

Published on: April 12, 2023
---Advertisement---

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்து வருகிறார். பொதுவாக கதாநாயகர்களோடு சேர்ந்து நடிக்கும்போது நடிகைகளுக்கு பெரிய கதாபாத்திரம் எதுவும் கிடைப்பதில்லை.

ஹீரோயினாகவே இருந்தாலும் அவர்களுக்கு கதையில் முக்கியமான கதாபாத்திரம் அமைவதில்லை. எனவே ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து சோலோவாக நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த ஜமுனா மற்றும் ரன் பேபி ரன் இரண்டு திரைப்படங்களும் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் திரைப்படம் சொப்பன சுந்தரி. இந்த திரைப்படத்தில் நடிகை தீபாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் அந்த படத்தில் நடந்த அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

நடிகைக்கு வந்த சங்கடம்:

சொப்பன சுந்தரி திரைப்படத்திற்காக ஒரு இடத்திற்கு அனைவரையும் அழைத்துள்ளார் இயக்குனர். வாங்க இன்னைக்கு போற இடத்தில் ஜாலியா ஷூட்டிங் பண்ணலாம் என கூறியுள்ளார். சரி என அனைவரும் கிளம்பி போனால் அது சரியாக வெயில் அடிக்கும் இடமாக இருந்துள்ளது.

ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் கா.பெ ரணசிங்கம், எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்களில் காலில் செருப்பு கூட இல்லாமல் வெயிலில் நடித்துள்ளார். இதனால் ஏற்கனவே வெயிலில் நடித்த அனுபவம் இவருக்குண்டு. ஆனாலும் இந்த படத்தில் அவரை கொஞ்சம் அதிகமாகவே படுத்தி எடுத்துவிட்டார் இயக்குனர்.

இந்த படத்தில் நான் பட்ட அவஸ்தைகளோடு ஒப்பிடும்போது அந்த இரண்டு படங்களும் ஒன்றுமே இல்லை என கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். வருகிற ஏப்ரல் 14 இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.