அஜித்திடம் கால்ஷீட் வாங்க ஒரே வழி இதுதான்!. நடிகையை வச்சி ரூட்டு போட்ட இயக்குனர்...

சினிமா உலகில் ஒரு பெரிய நடிகரின் கால்ஷீட்டை பெற இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பல வழிகளிலும் முயற்சிப்பார்கள். நடிகரின் உறவினர், நண்பர், நடிகரின் மரியாதைக்குரியவர், நடிகரின் ஆடிட்டர், வழக்கறிஞர், மருத்துவர், உதவியாளர், குடும்ப உறுப்பினர்கள், அவருடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள், அந்த நடிகரை வைத்து ஏற்கனவே படமெடுத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என யார் மூலமாவது அவரை நெருங்க முயற்சி செய்வார்கள்.

சிலருக்கு அது கிளிக் ஆகிவிடும். பலர் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். இப்படித்தான் ஒரு நடிகரின் கால்ஷீட்டை பலரும் பெறுகிறார்கள். இந்நிலையில், நடிகர் அஜித்தின் கால்ஷீட்டை ஒரு நடிகையை வைத்து ஒரு இயக்குனர் பெற்றது பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம்.

இதையும் படிங்க: சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட சித்தார்த்… மணிரத்னம் ஹீரோயினை தட்டி தூக்கிட்டாருப்பா!

அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்களை இயக்கியவர் சரண். இவர் பாலச்சந்தரிடம் சினிமா கற்றவர். அஜித்தை ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியவர் இவர்தான். அமர்க்களம் படத்தில்தான் இந்த மேஜிக் நடந்தது. அதோடு, இந்த படத்தில் நடித்த ஷாலினியையே அஜித் காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

அஜித்தின் காதலை முதலில் ஷாலினி ஏற்கவில்லை. நிறைய யோசித்துவிட்டு அஜித்தை பல மாதங்கள் காத்திருக்க வைத்துதான் சம்மதம் சொல்லி இருக்கிறார். அதேநேரம், இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதை சரண் படப்பிடிப்பு தளத்தில் கண்டுகொண்டார். இதை பல பேட்டிகளிலும் அவர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமா தவறவிட்ட சேஷூ!.. மதிக்காத வடிவேலு, யோகி பாபு!.. மனசு வைப்பாரா சந்தானம்?!..

அமர்க்களம் படத்தை துவங்கியபோது அஜித் பைக் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். அவரின் உடம்பெங்கும் கட்டு போடப்பட்டிருந்தது. அந்த படத்திற்காக ஷாலினி பாடிய ‘சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை’ என்கிற பாடலை ஒலிப்பதிவு செய்துவிட்டனர்.

ajithshalini

அறைக்கு சென்றவுடன் படுக்கையில் இருந்த அஜித்தின் காதில் ஹெட்போனை சொருகி அந்த பாடலை ஒலிக்கவிட்டார் சரண். அந்த குரல் அஜித்தை என்னவோ செய்தது. உடனே, அப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். அதேகுரல் கொண்ட பெண்ணையே அவர் காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story