நன்றி கடனுக்காக சாதாரண மனிதரின் இறுதிச்சடங்கில் உச்சி வெயிலில் கலந்து கொண்ட அஜித்!. காரணம் இதுதான்!..

Ajithkumar: நடிகர் அஜித்குமார் சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர். அவர் என்ன நினைக்கிறார் என்பதை யாருமே புரிந்துக்கொள்ள முடியாது. இறுதி அஞ்சலிக்கு கூட வர மாட்டார் என்ற எண்ணம் தான் பலரிடமும் இருக்கும். ஆனால் அஜித் நன்றிக்கடனுக்காக் செய்த ஒரு ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

முன்னணி நடிகராக இருக்கும் அஜித் சிலர் வீட்டு துக்க நிகழ்வுக்கு ஓடோடி வருவது. மக்கள் வருவார் என நினைக்கும் போது சத்தம் இல்லாமல் இருப்பது தொடர்கதையாகி இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது இரண்டு ப்ளைட் மாறி ஓடோடி வந்தார். ஆனால் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.

இதையும் படிங்க: தமிழ்ப்படங்களில் அதிக முறை தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் யார் தெரியுமா?

அப்படி இருக்க ஒருமுறை ஏவிஎம் ரத்னம் அஜித்துக்கு 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இருந்தார். அந்த நேரத்தில் ஃபெஃப்சி தொழிலாளர்களும், படைப்பாளிகளும் இரண்டு தரப்பில் சண்டையிட்டு கொண்டனர். அப்போ ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு அஜித் மற்றும் கமல்ஹாசனும் தான் ஆதரவாக தோல் கொடுத்தார்கள். இதை அறிந்த ரத்னம் நான் கொடுத்த அட்வான்ஸை உடனே கொடு என்றாராம்.

இதையும் படிங்க: வெங்கட் பிரபு தொடங்கி விட்டது… விஜய் ரூட்டையே ஃபாலோ செய்யும் ரஜினிகாந்த்… இந்த விஷயமுமா?

ஆனால் வாங்கிய காசை முதலீட்டாக்கி விட்டதால் அஜித்திடம் அப்போ காசு என்பது இல்லை. நிறைய பேரிடம் கேட்டும் அஜித்துக்கு யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை. அப்போ வடசென்னையை சேர்ந்த சேட் ஒருவர் எந்தவித பில்லும் வாங்காமல் நீ எதோ பிரச்னையில் இருக்க அதை சரி பண்ணு என பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டாராம்.

அந்த சேட் திடீரென இறந்துவிட அவருக்கு அஞ்சலி செலுத்த அஜித் நேரடியாக சென்று இருக்கிறார். மாலை போட்டுவிட்டு வராமல் சுடுகாடு போகும் வரை உச்சிவெயிலில் உடன் இருந்து இறுதி காரியம் முடித்துவிட்டே திரும்பினாராம். அப்படி இருந்தவர் மனோரமா இறுதி நிகழ்வில் கலந்துக்கொண்ட போது ரசிகர்கள் மல்லுக்கட்ட கடுப்பாகியே பல நிகழ்வுகளை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story