More
Read more!
Categories: Cinema News latest news

அஜித் ஒரு சஸ்பென்ஸான ஆளு! இத செஞ்சா மட்டுமே அவர பத்தி தெரிஞ்சுக்க முடியும் – டிடி சொன்ன ஐடியா

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி. விஜய் டிவியில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்குமே இப்போது அவர்தான் ஒரு சிறந்த தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பெரிய பெரிய முன்னனி நடிகர்களின் படங்கள் இசை வெளியீட்டு விழா டிடி இல்லாமல் நடப்பது இல்லை.

தன்னுடைய காலில் ஏற்பட்ட விபத்து காரணமாக விஜய் டிவியில் ஷோ பண்ணுவதை நிறுத்திக் கொண்டார். அதற்கு பதிலாக இப்போது படங்களில் நடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.  குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோழியாக தங்கையாக நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க : உள்ள கூட விடல!.. பிரசாந்த் பட விழாவில் அசிங்கப்பட விஜய்!.. அப்ப வந்த வெறி!…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் டிடியை சந்தித்து பல  கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பெருந்தன்மையாக பதிலைக் கூறினார். அவரிடம் யாரை பேட்டி எடுத்ததில் மிகவும் பயமாக இருந்தது என கேட்கப்பட்டது.

அதற்கு இளையராஜாவை பேட்டி எடுக்கும் போதுதான் மிகவும் பயந்தேன் என்றேன் ஆனால் அவர் எதுவும் திட்டுவார் என எதிர்பார்த்தேன், அப்படி எதுவும்  நடக்கவில்லை என்றும் கூறினார். மேலும் உங்கள் வாழ்க்கையில் ச்ச இவர பேட்டி எடுக்காம விட்டுட்டோமே? எடுக்கனும்னு ஆசைப்பட்ட நடிகர் யார் என கேட்கப்பட்டது.

இதையும் படிங்க : நயனுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்தது இவங்களா? அசால்ட்டா சொன்னது அனல் தெறிக்க வச்சுடுச்சே

அதற்கு அஜித், ரஜினி, விஜய் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டார். அதுமட்டுமில்லாமல் அஜித் சார் அவரை அவரே பேட்டி எடுத்துக் கொள்ளட்டும், அந்த ரிக்கார்டை அவரே வைத்துக் கொள்ளட்ட்டும், யாரிடமும் கொடுக்க வேண்டாம். அந்த மனுசன் மனசுல என்ன நினைக்கிறாருனு அட்லீஸ்ட் தெரிஞ்சுக்கலாம் அல்லவா?

அவருடைய எண்ணங்களே வேறு மாதிரியாக இருக்கும். அந்த பேட்டியை 30 வருடம் கழித்து போட்டாலும் அந்த காலகட்டத்திற்கு ஏற்பத்தான் அவருடைய அந்த எண்ணங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர் அஜித்.  அதற்காகவாவது அந்த பேட்டிய அவர் எடுக்கனும். இப்ப வேண்டாம். ஒரு 30 வருடம் கழித்து அதை அவர் வெளியிடட்டும் என்று கூறினார்.

 

Published by
Rohini

Recent Posts