இந்த படத்துக்கு ஸ்டேட் அவார்டு கிடைக்கும்னு நினைச்சேன்.. மிஸ் ஆன வருத்தத்தில் அஜித்

ajith_new
Ajith: சமீப காலமாக அஜித் பற்றிய தகவல்கள் பல ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் முதன்முறையாக மனம் திறந்து சில விஷயங்களை பேசி இருக்கிறார். அது ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன. தன் குடும்பம் எப்படிப்பட்டது ,ஆரம்ப காலத்தில் எப்படி சினிமாவிற்கு வந்தேன், தன்னுடைய அப்பா எப்படிப்பட்டவர் இவையெல்லாம் பற்றி அஜித் அந்த ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் அஜித். நடிகர் என்பதையும் தாண்டி அவருடைய ஒரே பேஷன் ரேஸில் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான். அது அவர் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் முன்பே இருந்த ஒரு எண்ணம். சொல்லப்போனால் தன்னுடைய பேஷனுக்காக அப்பாவின் கையை எதிர்பார்க்கக் கூடாது என்று எண்ணியவர். அதனால் தான் சினிமாவிற்கு வந்து நிறைய பணங்கள் சம்பாதித்து இந்த சினிமா துறையிலும் தனக்கான ஒரு அந்தஸ்தை பெற்ற பிறகு இன்று தன்னுடைய பேஷனை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் அஜித்.
ரசிகர்களுக்கு அவர் அடிக்கடி சொல்வது நீங்கள் நீங்களாக இருங்கள். உங்கள் குடும்பத்தை பாருங்கள் .குடும்ப உறுப்பினர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வது முக்கியம். நான் என்னுடைய வேலையை பார்க்கிறேன். அதற்காக எனக்கு பணம் கொடுக்கிறார்கள். என்னை பெரிதாக கொண்டாட வேண்டாம். தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்துவிட்டு அந்த கொண்டாட்டத்தை தியேட்டரிலேயே முடித்துவிட்டு போய்விடுங்கள் என்று பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார் அஜித்.
அதற்காக தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்தவர். நடிகராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் இருந்து வருகிறார். யாருடனும் அதிகமாக பேச மாட்டார். ரசிகர்களை சந்திக்க மாட்டார் என்ற விமர்சனங்களை எல்லாம் தாண்டி அவருடன் நெருங்கி பழகியவர்கள் அவரைப் போல் ஒரு நல்ல மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை என்று கூறியது தான் ஏராளம்.
அப்படிப்பட்டவருக்கு இன்று இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது கிடைத்திருக்கிறது. அஜித் எப்பொழுதுமே தன்னுடைய உழைப்புக்கான ஊதியத்தை எதிர்பார்ப்பவர். அந்த வகையில் ரேஸிலும் சாம்பியன் கோப்பையை பெற்று விட்டார். இப்போது பத்மபூஷன் விருதையும் பெற்றுவிட்டார். ஆனால் ஆரம்பத்திலேயே ஒரு விருதுக்காக நான் காத்திருந்தேன் .ஆனால் அது கிடைக்கவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது என்று முன்பு ஒரு பழைய பேட்டியில் கூறி இருக்கிறார் அஜித்.

அந்த வீடியோ தான் இப்போது வைரல் ஆகி வருகின்றது. அவர் மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் வரலாறு .கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அந்த படத்தில் அப்பன் மகன் என மூன்று வேடங்களில் நடித்திருப்பார் .அதில் அப்பா கேரக்டர் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஏனெனில் பெண் தன்மை கொண்ட கேரக்டரில் அஜித் அழகாக அதில் நடித்திருப்பார். அந்த படத்திற்கு ஸ்டேட் அவார்டு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அது கிடைக்கவில்லை. அது எனக்கு வருத்தத்தை அளித்தது என ஒரு பேட்டியில் கூறியது இப்போது வைரல் ஆகி வருகின்றது. ஆனால் அந்த அவார்டையும் தாண்டி இன்று இந்தியாவின் உயரிய விருதையே பெற்றுவிட்டார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.