More
Categories: Cinema News latest news

கண்ட நாயெல்லாம் புத்தி சொல்ல தேவையில்லை.! கொந்தளித்த அஜித்.!

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித்.  முன்பு ரஜினி – கமல் எப்படி உச்சத்தில் இருந்தார்களோ அதே போல தற்போது அஜித் – விஜய் எனும் போட்டிதான் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர்.

Advertising
Advertising

 

அஜித்தை பெரும்பாலும் பிடித்துபோவதற்கு காரணம், அஜித், ஓர் ஆகச்சிறந்த நடிகர் என்பதாலோ, அவருக்கு சிறப்பாக நடனம் ஆட தெரியும் எனவோ எந்த ஸ்பெஷல் காரணமும் இல்லை. அவர் எங்கும் எதற்கும் பயந்தது இல்லை. தனக்கு சரி என்று பட்டத்தை நெத்தியடி பதிலாக கூறி விடுவார்.

எனக்கு வேலை, நடிப்பது அதனை வைத்து நான் சம்பாதிக்கிறேன். அடுத்து என் குடும்பத்தை பார்த்து கொள்கிறேன். அதே போல, எனக்கு பிடித்ததை செய்கிறேன். அதே போல தான் ரசிகர்களும் குடும்பத்தை தான் முதலில் பார்க்க வேண்டும் என அறிவுரை கூறுவார். இந்த குணம் தான் அவருக்கு தீவிர ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது என்றே கூறலாம்.

சில சமயம் அந்த மனதில் பட்டதை பேசும் குணமே சிக்கலில் இட்டு சென்று விடுகிறது. அவர்க்கு கார் பந்தயத்தில் கலந்து கொள்வது என்பது கொள்ளை பிரியம். அவர் அதனால் பல சமயம் விபத்துக்குள்ளாகி விட்டார். இதனை கண்டதமிழ் சினிமா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார், ஒரு முறை, அஜித் இவ்வாறு கார் பந்தயத்தில் கலந்துகொண்டு, விபத்தில் சிக்கினால், அது அவரை நம்பி பணம் போட்டுள்ள தயாரிப்பாளருக்கு யார் பதில் கூறுவது,

இதையும் படியுங்களேன் – பழைய பகையெல்லாம் மறந்து கீர்த்தி சுரேஷை போனில் அழைத்த ‘அந்த’ ஹீரோ.!

விபத்தின் காரணமாக மருத்துவமனையில் இருந்தால் அந்த சமயம் படம் தாமதமாகும், வட்டி கட்ட வேண்டி வரும் என கூற, அதனை அஜித்திடம் ஒருவர் எடுத்து கூற சட்டென கோபப்பட்ட அஜித், கண்ட நாயெல்லாம் புத்தி சொல்ல தேவையில்லை என முகத்தில் அடித்தால் போல சொல்லிவிட்டாராம்

இதனை கண்டு திரையுலகில் பலர் கொந்தளித்தனராம். இதனை அஜித் பின்வாங்கி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற அளவுக்கு பிரச்சனை வந்ததாம். ஆனால் அஜித் இதனை கண்டுகொள்ளவே இல்லையாம். இதனை சினிமா பத்திரிகையாளர் அந்தணன் ஒரு வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

Published by
Manikandan

Recent Posts