அஜித் - ஹீரா விவகாரம்! உண்மையில் நடந்தது என்ன? வலைப்பேச்சு அந்தணன் சொல்லும் தகவல்

ajith_heera
Ajith - Heera: நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் கடந்த ஆண்டு பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கும் விழா நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டிலிருந்து பல பேருக்கு விருதுகள் கிடைத்தன. குறிப்பாக அஜீத், கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் ,செஃப் தாமோதரன் என பல பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்தன. அதே வேளையில் அஜித்தை பற்றி நடிகை ஹீரா அவருடைய வலைதள பக்கத்தில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது .இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய கருத்துக்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ்நாட்டையே திரும்ப பார்க்க வைத்தவர்கள்: இன்று தமிழ்நாட்டையே கலக்கி வருகிறார்கள் அஜித்தும் விஜய்யும். அரசியலில் ஒரு பக்கம் விஜய் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி வருகிறார் .இன்னொரு பக்கம் அஜித் கார் ரேஸ் அவருடைய படத்தின் வெற்றி என அடுத்தடுத்து அவரைப் பற்றியே பேச வைத்து வருகிறார். ஆனால் அஜித்தின் இந்த வளர்ச்சி சில அரசியல்வாதிகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் விஜய் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வரமாட்டேன் என்ற எண்ணத்தில் தான் இருந்தார். ஆனால் அவருடைய படங்களை ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பது ஏதாவது ஒரு வகையில் அவருடைய படங்களுக்கு பிரச்சனை செய்வது என விஜயை குத்தி குத்தி இன்று அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணமே இங்கு இருக்கும் இரு அரசியல் பெரும்புள்ளிகள் தான்.
பெரும் பலத்தோடு இரு ரசிகர்கள்: அதே மாதிரி தான் அஜித்தும் வருங்காலத்தில் அதாவது ஒரு பத்து வருடம் கழித்து அரசியலுக்கு வருகிறார் என்றால் அது இதைவிட பயங்கரமாக அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இன்னொரு பக்கம் அஜித்தை வைத்து விஜயை எப்படியாவது முடக்க வேண்டும் என்றும் சில அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். ஏனெனில் இன்று மாபெரும் சக்திகளாக இருப்பது விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் தான். இவர்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து விட்டால் இப்போதைய காலகட்டத்தில் அது விஜய்க்கு ஆதரவாகத்தான் இருக்கும்.
கூட்டுச்சதி: அதனால் இரு ரசிகர்களையும் ஒன்று சேர்க்க விடாமல் இங்கு சில அரசியல் புள்ளிகள் வேலை செய்கிறார்கள். ஐடி விங்குகளும் அதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். அதன் ஒரு விளைவு தான் சமீபத்தில் ஹீரா விவகாரம். அஜித்துக்கும் ஹீராவுக்கும் காதல் இல்லை என்று சொல்ல முடியாது. அதை பற்றி நானே பல பத்திரிகைகளில் எழுதி இருக்கிறேன் .அதற்காக எந்த ஒரு மனிதனும் ஆரம்பத்தில் காதலை கடந்து விடாமல் வர முடியாது. இப்போது 40, 50 வயது மதிக்கத்தக்கவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஆரம்பத்தில் இன்னொரு வாழ்க்கை கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.

பின்னணியில் அரசியல்: அதை நாம் மறுத்து விட முடியாது. ஆனால் 25 வருடமாக இந்த விவகாரம் வெளியில் வராமல் இப்போது வருகிறது என்றால் அதற்குப் பின்னணியில் இருப்பதும் அரசியல் தான். இது ஹீரா எழுதினாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது .ஏனனில் அவருடைய வலைதள பக்கத்தை இப்பொழுது பார்த்தால் அந்தப் பக்கமே காணாமல் போய்விட்டது .அதனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்கு தெரியாது. ஆனால் இதை விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் ட்ரோல் செய்து வருகிறார்கள் .இதற்காகத்தான் ஹீராவை உள்ளே கொண்டு வந்திருக்கிறது சில அரசியல் புள்ளிகள்.
இந்த பிரச்சனையை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்ததும் அவர்களுக்கு எதிராக அஜித் ரசிகர்களும் அஜித்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி அஜித் விஜய் ரசிகர்களை சண்டை போட வைத்து சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவான ஓட்டுகளை சேகரிக்கவே இப்படி செய்கிறார்கள். இது ஹீராவே வெளியில் வந்து சொன்னால்தான் நம்மால் நம்ப முடியும். ஆனால் இதற்குப் பின்னணியில் இருப்பது ஒரு பெரும் அரசியல் என வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.