Connect with us

Cinema News

அவருடன் எந்த சண்டையும் இல்லை!.. கேட்டது கிடைச்சுடுச்சு!.. ஹேப்பியா அஜர்பைஜான் கிளம்பிய அஜித்!..

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷெட்யூலை முடித்துவிட்டு அதற்கு மேல் லைகா நிறுவனம் படத்திற்கான பட்ஜெட்டை ஒதுக்க முடியாத நிலையில், படக்குழு சென்னை திரும்பியது. கடந்த ஆறு மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் லைக்கா நிறுவனம் இருந்து வந்ததாகவும் அதனால்தான் விடாமுயற்சி திரைப்படம் படப்பிடிப்பு தொடங்காமல் அப்படியே கிடப்பில் கிடந்ததாகவும் கூறினார்கள்.

தடம், மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. விக்னேஷ் சிவன் வேண்டாம் என அஜித் ஒதுக்கிய நிலையில், அஜித்தின் 62-வது படத்தை இயக்க மகிழ்ச்சி திருமேனியின் முன்வந்தார்.

இதையும் படிங்க: ஜூன் மாசத்துக்கு இப்படியொரு சென்டிமென்ட் இருக்கா?.. வரிசையா ஒவ்வொரு வருஷமும் சொல்லி அடிக்குதே!..

படம் முழுவதும் அஜர்பைஜானிலேயே படமாக்கப்பட வேண்டும் என்கிற உறுதியில் மகிழ்ச்சி திருமேனி இருந்த நிலையில் வெளிநாட்டில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தினார் எக்கச்சக்க முதல் செலவாகும் என்பதையும் தாண்டி லைகா நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க முன் வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பொன்னியின் செல்வன் 2, லால் சலாம், மிஷன் சாப்டர் ஒன் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்த நிலையில், லைகாவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

அதன் காரணமாக விடாமுயற்சி படத்திற்கு ஒதுக்கிய பட்ஜெட்டை விட அதிக செலவு ஆன நிலையில், அந்த படத்திற்கு பொருளாதார உதவி செய்ய முடியாத சூழல் நிலவியதாகவும் நடிகர் அஜித்குமாருக்கு ஒழுங்காக சம்பளம் சென்று சேரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: கை நிறைய காசு! யாருக்கு கிடைக்கும்? மதி கெட்டுப் போய் கமல் படத்தில் மிஸ் செய்த பொன்னம்பலம்

அஜித்குமார் உடனடியாக தனது 63-வது படமாக குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து விட்டார். அதன் முதல் கட்ட படப்பிடிப்பையும் ஹைதராபாத்துக்கு சென்று நடத்தி வந்தா அஜித்குமார், லைகாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது எப்படியாவது அந்த படத்தை முடித்து ஒரு தீபாவளிக்குள் வெளியிட வேண்டும் என்கிற பிளானுடன் பரபரப்பாக படப்பிடிப்பை ஆரம்பிக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஜூன் 20-ஆம் தேதியான இன்று முதல் அஜர்பைஜானில் மீண்டும் விடாமுயற்சி திரைப்படம் துவங்குகிறது. இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நேற்று இரவு விமான நிலையத்திற்கு சென்று அஜர்பைஜானுக்கு புறப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மகிழ் திருமேனியுடன் எந்தவொரு சண்டையும் இல்லை என்றும் லைகா நிறுவனம் தனக்கான சம்பளத்தை கொடுத்த நிலையில், அஜித் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றுள்ளதாக கூறுகின்றனர். இந்த முறை என் ஒரு பிரச்சனையில் நடக்காமல் கடைசி முயற்சியாக விடாமுயற்சி முடிவடையும் என எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: வேலையில்லா பட்டதாரி வாய்ப்பை அமலா பால் இப்படித்தான் வாங்கினாரா?.. விவாகரத்துக்கு அதுதான் காரணமா?..

 

google news
Continue Reading

More in Cinema News

To Top