சென்னை சேப்பாக்கம் என்ன?.. டெல்லி செங்கோட்டையே அதிர போகுது!.. குடும்பத்துடன் கிளம்பிய அஜித் குமார்!..

by Saranya M |
சென்னை சேப்பாக்கம் என்ன?.. டெல்லி செங்கோட்டையே அதிர போகுது!.. குடும்பத்துடன் கிளம்பிய அஜித் குமார்!..
X

நடிகர் அஜித்குமார் தனது திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாட சென்னைக்கு வந்துள்ள நிலையில், தனது மனைவி ஷாலினியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை ஒட்டுமொத்த குடும்பத்துடன் கண்டு ரசித்தார்.

அஜித் குமார், ஷாலினி, அனோஷ்கா மற்றும் ஆத்விக் என குடும்பமே சேப்பாக்கம் மைதானத்தில் அமர்ந்து கொண்டு அழகாக கிரிக்கெட் போட்டியை ரசித்துப் பார்த்ததை கண்டு ரசிகர்கள் வியந்தனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் அந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். மேலும் நடிகர் அஜித் குமாரையும் சந்தித்து அவர்கள் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தன.

என்னப்பா திடீரென அஜித்குமார் பப்ளிக் அப்பீயரன்ஸ் எல்லாம் கொடுக்கிறாரே என்ன விஷயம் என ரசிகர்கள் மண்டையைப் போட்டு குடைந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக டெல்லிக்கு தனது குடும்பத்துடன் புறப்பட்டுள்ளார் அஜித்குமார்.

நாளை டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கரங்களால் அஜித்குமார் பத்மபூஷன் விருதை பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. நடிகை சோபனா மற்றும் கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்டோருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இன்று ஞாயிற்றுக்கிழமை வரை பல தியேட்டர்களில் அதிகபட்ச ரசிகர்களுடன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 170 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் உலக அளவில் இந்த படம் 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு அஜித்குமாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பொன்னான ஆண்டாகவே மாறி உள்ளது.

Next Story