விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மார்க்கெட். விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் அஜித்தின் புதிய படத்தை எடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என பலரும் பேச துவங்கி விட்டனர். அதற்கு முக்கிய காரணம் அஜித் கேட்கும் 185 கோடி சம்பளம்தான்.
அதேநேரம் இந்த படத்தை இயக்குவது ஆதிக் ரவிச்சந்திரன் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில்தான் தேடி வந்த ஒரு தயாரிப்பாளரை மிஸ் பண்ணியிருக்கிறார் அஜித். தெலுங்கில் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜ். விஜயை வைத்து வாரிசு படத்தைக் கூட இவர்தான் தயாரித்திருந்தார்..
மலையாளத்தில் உன்னி முகுந்தனை த்து ஹனீஃப் அடேனி என்பவர் இயக்கிய திரைப்படம் மார்கோ. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இந்த படத்தில் இருந்தாலும் படம் சூப்பர் ஹிட். இந்த இயக்குனரை வைத்து படம் தயாரிக்க விருப்பப்பட்ட தில் ராஜூ அவரை அழைத்து அஜித்துக்கு ஒரு கதையை தயார் பண்ண சொல்லியிருக்கிறார். அவரும் மிகவும் ஆர்வத்துடன் ஒரு கதையை உருவாக்கி தில் ராஜிடம் சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப் போனதால் அவரை அஜித்திடம் கதை சொல்ல வைத்திருக்கிறார் தில் ராஜ்
ஆனால் பல நாட்கள் அமையும் அஜித்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். நடிக்கிறேன்.. நடிக்கவில்லை.. கதை பிடித்திருக்கிறது.. பிடிக்கவில்லை.. ஒரு படத்தில் நடித்துவிட்டு உங்கள் படத்தில் நடிக்கிறேன் என எதுவுமே அஜித் தரப்பிலிருந்து சொல்லப்படவில்லையாம். இதில் கடுப்பான தில் ராஜ் இயக்குனரை அழைத்து ‘அஜித் இல்லையென்றால் பரவாயில்லை. இதே கதையை நீங்கள் பாலையாவிடம் சொல்லுங்கள் என அனுப்பி வைக்க கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டார் பாலையா.
ஒருபக்கம் தனது படத்துக்கு தயாரிப்பாளரே கிடைக்காத நிலையில் அஜித், ஒருபக்கம் இப்படி தேடி வந்த தயாரிப்பாளரை மிஸ் பண்ணியும் இருக்கிறார்..





