தரக்குறைவாக பேசிய வடிவேலுவுக்கு தன் பாணியில் பதிலடி கொடுத்த அஜித்! இது யாருக்காவது தெரியுமா?

Ajith Vadivelu: சினிமாவில் அஜித்துக்கும் வடிவேலுக்கும் இடையில் ஒரு விரிசல் இருப்பதாகவும் அது அஜித் நடித்த ராஜா படத்தின் போது நடந்தது எனவும் ஒரு செய்தி அடிக்கடி பத்திரிகைகளில் வெளியாவதை நாம் பார்த்திருப்போம். தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருப்பவர் அஜித். ஆரம்பத்தில் பல போராட்டங்களை சந்தித்து இன்று ஒரு பெரிய உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று அஜித்தின் புதிய படங்களுக்கு ஒரு மாஸ் ஓப்பனிங் எப்போதுமே இருந்து வருகிறது. அவருடன் பல நடிகர்கள் நடிகைகள் நடித்திருக்கும் நிலையில் அஜித்தை பற்றி இன்றுவரை நல்ல விதமாகவே கூறி வருவதை நாம் பார்த்து இருக்கிறோம். மிகவும் ஜென்டில்மேன். விஜய் கூட யாரிடம் எளிதில் பேச மாட்டார். ஆனால் அஜித் சகஜமாக பழகக் கூடியவர்.

இதையும் படிங்க: இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்!.. அரண்மனை 4 ஓடிடி ரிலீஸ் இந்த வாரம் இல்லையாம்!..

எல்லோரிடமும் சமமாக பேசக் கூடியவர் என்றெல்லாம் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். தன்னை படப்பிடிப்பின் போது வாடா போடா என சொன்னதற்காக வடிவேலு மீது அஜித் கோபப்பட்டதாகவும் அந்த ஒரு படத்திற்குப் பிறகு வடிவேலுவும் அஜித்தும் இணையவில்லை என்பதும் நமக்கு தெரிந்த விஷயங்கள். ஆனால் அதை அஜித் பெரிதாக எடுத்துக் கொண்டதன் காரணமாக அவர் வருத்தப்பட்டதாகவும் அதன் பிறகு வடிவேலு நடிக்கிற படங்களில் அஜித் நடிப்பதில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு மேடையில் வடிவேலுவும் அஜித்தும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்ள வாய்ப்பு வந்தது. அப்போது அஜித் வடிவேலுவை பார்த்ததும் அவரே போய் வடிவேலுவின் கையைப் பிடித்து அண்ணே எப்படி இருக்கீங்க என கேட்டாராம். இதை பார்த்ததும் வடிவேலுவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டதாம். இதை ஒரு பிரபல இயக்குனர் பேட்டியின் போது கூறினார்.

இதையும் படிங்க: கமல் படத்துக்கு முட்டுக்கட்டையா? என்ன இது புதுத்தகவலா இருக்கே..?!

பொதுவாக அஜித்தை பொருத்தவரைக்கும் லைட் மேனில் இருந்து அனைத்து டெக்னீசியன்களிடமும் மிகவும் மரியாதையாக பழகக்கூடியவர். நல்லா இருக்கீங்களா சாப்பிட்டீங்களா? வேற எதுவும் வேண்டுமா என்றெல்லாம் கேட்டு கேட்டு அவர்களை மிகவும் மரியாதையாக நடத்தக்கூடியவர். அப்படிப்பட்ட அவரிடம் வடிவேலு இந்த மாதிரி பேசியதும் திரையுலகினர் மத்தியில் அந்த நேரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது,.

 

Related Articles

Next Story