Connect with us

Cinema History

பாபுவின் மகளாக இருந்த ஷாலினி… அஜித்தின் மனைவியான கதை.. எப்படி நடந்தது இந்த மேஜிக்..?

Shalini Ajithkumar: தமிழ் சினிமாவில் கம்மி படங்களிலேயே அதிக புகழை தேடியவர் ஷாலினி. ஆனால் நாயகியாக நடித்ததை விட குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்கள் தான் இன்றளவும் ட்ரெண்ட்டில் இருக்கிறது. அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் எப்படி அஜித்துக்கு மனைவியானார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

கேரளாவில் கொல்லத்தினை சேர்ந்தது ஷாலினியின் குடும்பம். அவர் தந்தை ரொம்பவே தன்மையான மனிதர். அருமையாக பாட்டு பாடுபவர். அவரை சினிமாவில் பாடினால் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என நண்பர்கள் சொன்னதை நம்பி குடும்பத்துடன் சென்னை வந்துவிடுகிறார். ஆனால் இங்கு பாட வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்பாகி இருக்கிறது.

இதையும் படிங்க: தலைவர் பங்கம் பண்ணுறாருப்பா.. தலைவர்170 டைட்டில் முதல் ஷூட்டிங் வரை… லேட்டஸ்ட் அப்டேட் இதான்..!

அதனால் வருமானத்துக்கு ஆடை வடிவமைப்பாளரிடம் உதவியாளராக சேர்ந்து விடுகிறார். சைக்கிளில் ஆடைகளை வைத்துக்கொண்டு சம்மந்தப்பட்ட ஷூட்டிங்கில் கொண்டு சேர்ப்பாராம். அவர் தன்னுடைய மகள் ஷாலினியை சின்ன கேமராவில் படம் எடுத்து தன்னுடைய பர்சில் வைத்து இருந்தார்.

ஒருநாள் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்த போது பர்ஸை எடுத்த போது ஷாலினியின் படத்தினை பார்த்த ப்ரோடக்‌ஷன் மேனேஜர் இந்த பாப்பா நடிப்பாங்களா எனக் கேட்கிறார். அவர் என்ன சார் எனக் கேட்க இயக்குனர் பாசில் குழந்தை நட்சத்திரம் தேடுவதாக கூறுகிறார். இவர் தந்தையும் ஷாலினியை கூட்டிக்கொண்டு வருகிறார் படப்பிடிப்புக்கு.

அவரின் துறுதுறுப்பான நடிப்பை பார்த்த பாசில் உடனே தன்னுடைய படத்தில் புக்காகி விடுகிறார். அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வருகிறது. இது ஷாலினியின் நடிப்பை உள்வாங்கி நடிப்பதற்காகவே நடக்கிறது. இதனால் குடும்பமும் வளர்ந்தனர்.

இதையும் படிங்க: நடுக்கடலில் வித்தியாசமான முறையில் திருமணம்! ஒரே வரியில் திருமண உறவை முறித்த நடிகை

ஒருகட்டத்தில் மணிரத்னம் தன்னுடைய அஞ்சலி படத்துக்கு ஒரு குழந்தை நட்சத்திரத்தினை தேடுகிறார். ஷாலினி வளர்ந்துவிட்டதால் அவர் தங்கை ஷாமிலியை நடிக்க வைக்கலாம் என்ற ஐடியாவில் சுஹாசினி வீட்டுக்கு வருகிறார். அவருக்கு உடனே ஷாமிலியை பிடித்துவிட அவர் தந்தையிடம் கேட்கிறார் சுஹாசினி.

அவர் தயங்க 3 வயது குழந்தையாச்சே என்கிறார். அதை மணிரத்னம் பாத்துக்குவார் என்கிறார். முதல் படமே தேசிய விருது. இதைதொடர்ந்து ஷாலினி நடிப்பை நிறுத்திவிட அவர் வளர்ந்த பின்னர் அவரை பாசிலே நடிகையாக அறிமுகப்படுத்துகிறார்.

முதல் படமே நல்ல ரீச் கிடைத்துவிடுகிறது. அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் போதே இருவருக்கும் காதல் மலர்ந்துவிடுகிறது. இந்த விஷயத்தினை ஷாலினி வீட்டில் சொல்லும் போது முதலில் எதிர்ப்பு தான் கிளம்புகிறது. பின்னர் அவர்கள் கொஞ்சமாக சமாதானம் ஆகின்றனர்.

ஆனால் ஷாலினியை கல்யாணம் செய்துக்கொள்ள அஜித் ஒரு கோடி கொடுத்து திருமணம் செய்து கொண்டாராம். இது அப்போதைய நேரத்தில் மீடியாவில் கசிந்த செய்தி தான். இதை அஜித்தின் குடும்பமோ, ஷாலினியோ சொல்லினால் தான் நம்ப முடியும் என பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித்துக்கு நடிப்பில் டெடிகேஷனே இல்லை.. சூர்யா ஃபீல்ட் அவுட் நடிகர்.. பகீர் கிளப்பும் பிரபல நடிகர்..!

google news
Continue Reading

More in Cinema History

To Top