Connect with us
batcha

Cinema News

‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் இருக்கிற நடிகர் அஜித்! இவரே சொன்னதுக்கப்புறம் நோ அப்ஜெக்சன் – அடுத்த பாட்ஷாவா?

Super Star Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு மாபெரும் ஆளுமையாக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு தனி பாலிசியில் தன்னுடைய கெரியரை எந்தவொரு இடையூறும் இல்லாமல் இன்றளவும் ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தோடு சிறப்பாக கொண்டு போகிறார்.

இப்போது அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முழு மூச்சுடன் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரே ஆசையாக கேட்டு வாங்கிய அந்த பரிசு..! இதுக்கா இவ்வளவு? சண்டைக்கு நின்ற தயாரிப்பாளர்..!

இந்தப் படத்திற்கு பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  இணைய இருப்பதாக ஒரு தகவல் போய்க் கொண்டிருக்கின்றது.ஒரு ஸ்டைலான பக்கா மாஸான நடிகராக வலம் வரும் அஜித்தை பற்றி பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு சூப்பரான தகவலை கூறி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

அதாவது அவரது இயக்கத்தில் பாட்ஷா படத்தில் ரஜினி நடித்தார். அதை பற்றி பேசும் போது  ‘இந்த படத்திற்கு ஒரு சூப்பர் ஸ்டார் இமேஜ் உள்ள நடிகர் நடித்தால்தான் நன்றாக இருக்கும் . அப்படி இல்லாத போது இந்த படம் வொர்க் அவுட் ஆகாது. ஒரிஜினல் பாட்ஷாவை தெலுங்கில் பண்ணும் போது சிரஞ்சீவியை வைத்துதான் டிரை பண்ணோம். ஆனால் அவர் பிஸியாக இருந்தார்’ என சுரேஷ் கிருஷ்ணா கூறினார்.

இதையும் படிங்க: எஸ்.ஏ.சி சொன்னாருனுதான் போனேன்! ‘பாட்ஷா’ பட இயக்குனருக்கே தண்ணி காட்டிய விஜய்!

அதன் பிறகு ரஜினி மோகன்பாபுவை வைத்து பண்ணலாமா என்று கேட்டாராம். அதற்கு சுரேஷ் கிருஷ்ணா  ‘சிரஞ்சீவியை வைத்து பண்ணால் சரியாக இருக்கும். ஏனெனில் ஒரு சூப்பர் ஸ்டார் இமேஜ் உள்ள  நடிகர், பாட்ஷா படத்தின் கதை படி முதல் பாதி முழுவதும் சைலண்டா இருந்து இரண்டாம் பாதிதான் முழு கதையையும் ஆக்கிரமிப்பார்.அதனால் அப்படி ஒரு இமேஜ் உள்ள நடிகர் நடித்தால்தான் நன்றாக இருக்கும் ’ என கூறினாராம்.

அண்ணாமலை படத்தில் நடித்துவிட்டு பாட்ஷாவில் ரஜினி நடிக்கும் போது ஏன் முதல் பாதியில் இப்படி இருக்கிறார்? யாரையும் அடிக்கக் கூட மாட்ட்டிக்கிறாரே? என்று ரசிகர்களை டென்ஷனாக்கி இரண்டாம் பாதியில் ஒரு பாம்ப் விழுவதை போல் வெடித்துச் சிதறியிருப்பார் ரஜினி. அது ஒரு ஆண்டி ஹீரோ மாதிரியே இருக்கும்.

இதையும் படிங்க: ப்ப்பா!. குட்ட கவுன்ல சும்மா செம தக்காளி!. வாலிப பசங்க மனச கெடுக்கும் விஜே பார்வதி….

அதனால் இந்தப் பாட்ஷாவை மறுபடியும் பண்ண யாராவது வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதற்கேற்றவகையில்  நான் சொன்னதுக்கு மிகவும் பொருத்தமான நடிகர் அஜித்தான் என்று சுரேஷ் கிருஷ்ணா கூறினார்.

மேலும் அஜித் ஒரு பவர் ஃபுல்லான நடிகர். நிறைய வில்லன் ரோல் பண்ணியிருக்கிறார். அதனால் இந்த கேரக்டர் ரோலை எடுத்து நடிக்க அவருக்கு தகுதி இருக்கிறது. ஒரு சிறந்த நடிகரும் கூட என சுரேஷ் கிருஷ்ணா கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top