அஜித் நடிப்பில் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திர இயக்கதில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது.. அதன்பின் இப்போது வரை அஜித் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை.. அதே நேரம் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
ஆனால் எனக்கு 185 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் என அஜித் கேட்டதால் எந்த தயாரிப்பாளரும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. தமிழ்நாட்டில் யாரும் தயாரிப்பாளர் கிடைக்காததால் மும்பை சென்று சில சிலரிடம் பேசினார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை
. இந்நிலையில், கார் ரேஸுக்காக துபாயில் இருக்கும் அஜித்துக்கு ஒரு தொழிலதிபர் பழக்கமாகியிருக்கிறார். அவர் பெரிய தொழிலதிபர் என்பதால் அஜித்தை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்.
அவரிடம் அஜித் ‘எனக்கு 170 கோடி சம்பளம் கொடுத்து விடுங்கள்’ என சொல்ல அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.. அடுத்தகட்ட வேலைகள் துவங்கும் நிலையில் ‘170 கோடி சம்பளம் மற்றும் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு’ என அஜித் கேட்க அதிர்ச்சியடைந்த அந்த தொழிலதிபர் ‘இந்த ப்ராஜெக்ட்டே வேண்டாம்.. உங்களுக்கு நண்பராக மட்டுமே இருக்கிறேன்’ என சொல்லிவிட்டாராம். சம்பல விஷயத்தில் அஜித் இப்படி மிகவும் கறாராக இருந்தால் அவரின் சினிமா கெரியரே காலியாகிவிடும்’ என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.




