விமான நிலையத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு.. அஜித்துக்கு திடீர் மருத்துவ பரிசோதனை

by Rohini |
விமான நிலையத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு.. அஜித்துக்கு திடீர் மருத்துவ பரிசோதனை
X

Ajith: இப்போது இணையதளத்தில் முழுவதுமாக ட்ரெண்டிங்காக இருக்கிறார் அஜித். கார் ரேஸ்சில் அவருடைய அணி வெற்றி பெற்றதிலிருந்து தொடர்ந்து குட்பேட்அக்லி படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இப்போது பத்மபூஷன் விருது கிடைத்த வரைக்கும் இந்த வருடம் முழுவதும் அஜித்தை பற்றிய பேச்சு தான் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் அவருடைய திருமண நாள் கொண்டாடப்பட்டது. நாளை அவருடைய பிறந்தநாள் என தொடர்ந்து அவரைப் பற்றிய செய்திகள் தான் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருக்கின்றன. தமிழ்நாட்டையே தன்னை திரும்பி பார்க்க வைத்துவிட்டார் அஜித்.

இந்த தொடர் வெற்றிக்கு முழு காரணம் ஷாலினி என்று அவர் கூறியது இன்னும் அவர் மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய மதிப்பையும் மரியாதையும் அதிகப்படுத்தி இருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்மபூஷன் விருது பெற்ற கையோடு அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருந்தார் அஜித்.

அவருடைய அந்த பேட்டியும் இப்போது வைரல் ஆகி வருகின்றது. விருதை பெற்றதும் சென்னை வந்தடைந்த அஜித்தை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர் சும்மா வந்தாலே ரசிகர்கள் அவரைப் பார்க்க கூட்டமாக கூடி விடுவார்கள். இதில் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெற்றிருக்கிறார்.

அதனால் அவரைப் பார்க்க விமான நிலையத்தில் ஏராளமான பேர் கூடியிருந்தனர். அப்போது ஒருவர் சால்வை அணிய முற்பட்டபோது அதற்காக அஜித் மிக தாழ்மையுடன் வேண்டாம் என கை கூப்பி கேட்டுக் கொண்டார். வெளியில் வரும்போது அங்கு இருந்த கூட்ட நெரிசலால் அவருடைய காலில் ஏதோ சிறிய அடிபட்டிருப்பதாகவும் அதற்காக இப்போது மருத்துவமனையில் பரிசோதனை செய்திருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அஜித் தரப்பிலிருந்து காலில் சிறிய அளவில் அடிபட்டு இருப்பதால் அதற்கான பிஸியோ சிகிச்சை தான் இது என கூறியிருக்கிறார்கள் .ஒரு சாதாரண கூட்ட நெரிசலுக்கு அவருடைய உடல்நிலை தாங்க முடியவில்லை. அந்த அளவுக்கு அஜித் நிறைய வலிகளை தாங்கிக் கொண்டுதான் அவருடைய அடுத்த அடுத்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

Next Story