நான் நடிக்க வந்தது ஒரு விபத்து!.. வீட்ல யாருக்கும் பிடிக்கல!.. மனம் திறந்த அஜித்!….

by சிவா |   ( Updated:2025-04-30 22:06:22  )
good bad ugly ajith
X

good bad ugly ajith

அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். அஜித்தின் வீட்டில் சினிமா பின்னணியில் யாரும் இல்லை. அஜித்துக்கு 2 தம்பிகள். அவர்கள் எல்லோரும் நன்றாக படித்தாலும் அஜித்துக்கு படிப்பின் மீது ஆர்வம் காட்டவில்லை. பைக் ஓட்டுவது, பைக் ரேஸில் கலந்துகொள்வது போன்ற விஷயத்தில் மட்டுமே ஆர்வம் இருந்தது.

அஜித் நேரம் செலவழிப்பது எல்லாமே வீட்டின் அருகேயுள்ள ஒரு பைக் பட்டறையில்தான். பைக்கை எப்படி பழுது பார்க்கிறார்கள் என்பது ஆர்வமுடன் பார்த்து கற்றுக்கொண்டார். நண்பர்கள் சொன்னதால் மாடலிங் துறையில் நுழைந்தார். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரணும், அஜித்தும் பள்ளியில் ஒன்றாக நடித்தார்கள்.

சரண் சொன்னதால் தெலுங்கில் எஸ்.பி.பி சொல்லி பிரேம புஸ்தகம் என்கிற படத்தில் நடிக்க அஜித்துக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அஜித்தின் முதல் படம். அந்த படத்தின் புகைப்படங்களை பார்த்துவிட்டு இயக்குனர் செல்வா தான் இயக்க திட்டமிட்ட அமராவதி படத்தில் நடிக்க அஜித்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படம் பற்றி பேச செல்வாவும், தயாரிப்பாளரும் வந்தபோது அஜித் அந்த பட்டறையில்தான் இருந்தார்.

ajith
ajith

படத்தில் நடிக்க ஒப்புகொண்ட அஜித் கேட்ட சம்பளம் 40 ஆயிரம். அந்த பணம் கூட ஒரு புது பைக் வாங்கவே. அதன்பின் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார் அஜித். இவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உருவானது. பல ஹிட் படங்களை கொடுத்து விஜய்க்கே டப் கொடுக்கும் நடிகராக மாறினார். இப்போது பத்மபூஷன் விருது வாங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.

இந்த விருதுக்கு பின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அஜித் பல விஷயங்களை பற்றி பேசினார். நடிப்பு பற்றிய எந்த சிந்தனையே இல்லாமல் இருந்தேன். ரேஸ் மீதான என் ஆர்வத்தை தொடர மாடலிங் வருமானத்தை பயன்படுத்தினேன். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என முடிவு செய்த போது குடும்பத்தினர் கவலைப்பட்டனர். நான் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். நான் ஒரு நடிகனாக என்னை நிரூபித்தேன்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story