இந்த கதாபாத்திரத்தில் என்னை கிண்டல் செய்வாங்களா... அஜித்தே பயந்த சம்பவம்... என்ன படம் தெரியுமா?

அஜித் தனது கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டுபவர். அவரே தனது ஒரு கதாபாத்திரத்தால் ரசிகர்களிடம் கிண்டலுக்கு ஆளாகுவேனா என பயந்த சம்பவமும் நடந்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அமராவதி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான அஜித். அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை படம் தான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அஜித்தின் இரண்டாவது வெற்றி திரைப்படம் தேசிய விருது பெற்ற காதல் கோட்டை. இயக்குனர் அகத்தியன் இயக்கிய இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தேவயானி நடித்தார்.

Ajith kumar
1997ல், அஜித் நடிப்பில் வெளியான ஐந்து படங்களும் பெரிதாக வசூல் செய்யவில்லை. அதே நேரத்தில் தான் திரைப்பட விநியோகத் தொழிலில் அஜித் ஈடுபட்டார். அதிலும் அவருக்கு பெருத்த நஷ்டமே வந்தது. இதனை தொடர்ந்து அடுத்த அடியாக அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம். அது அஜித்தின் திரை வாழ்வில் மிகப்பெரிய தடைகளை வைத்தது.
இதையும் படிங்க: ரஜினி நடிக்க ஆசைப்பட்ட படம்… பிளானை மாற்றிய இயக்குனர்… அஜித்துக்கு அடித்த லக்…
தொடர்ச்சியாக சினிமாவிற்கு வந்தபோது தான் சரண் இயக்கத்தில் காதல் மன்னன் என்னும் மாஸ் ஹிட் படத்தில் நடித்தார். தொடர்ச்சியாக சினிமாவில் வாய்ப்புகள் என வளர்ந்து கொண்டு இருந்தார். ஆனால் அவரின் பிரச்னைகள் பின்னால் சத்தமே இல்லாமல் வந்துக்கொண்டு இருந்தது.

Ajith kumar
2006ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான சில படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. வசூல் கூட சுமாராக தான் இருந்தது. இந்நிலையில் தான் அஜித்தின் படமான வரலாறு ரொம்ப நாள் தாமத்திற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு தயாரானது. அதில் அப்பா, இரண்டு மகன்கள் கேரக்டரில் அஜித் நடித்திருப்பார். இதில் பரதநாட்டிய கலைஞராக அஜித் நடித்திருந்தார்.
அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு யாரும் கிண்டல் செய்வார்களோ என அஜித் முதலில் பயந்தாராம். ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் தான் இல்லை. நன்றாக இருக்கும் எனக் கூறி நடிக்க வைத்தாராம். இந்த கதாபாத்திரத்தால் தான் அஜித்தின் அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்தது.

Ajith kumar
அஜித்திற்கு மூன்றாவது பிலிம்பேர் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அசின், கனிகா உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்றும் நடித்திருந்தனர்.