16 வருஷ போராட்டமா?.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் உருவான கதையை கேட்டு ஆடிப்போன நடிகர்..

டைரக்டர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள ஆடுஜீவிதம் படத்தை பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரை வைத்து புரமோட் செய்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து 2.0 படத்தில் நடித்த அக்‌ஷய் குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 8ம் தேதி அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள படே மியான் சோட்டே மியான் படத்தின் புரமோஷனை நாடு முழுவதும் அக்‌ஷய் குமார் செய்து வருகிறார். இந்நிலையில், அவரது பட புரமோஷன் விழாவுக்கு சென்ற பிருத்விராஜ் தனது ஆடுஜீவிதம் படத்தின் புரமோஷனையும் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டேஜ்ல இருக்க மொத்த கண்ணும் உன்மேலத்தான் செல்லம்!.. சேப்பாக்கத்தை கவர்ச்சி மைதமானா மாத்திட்டாரே!..

ஆடுஜீவிதம் படத்தின் டிரெய்லரை பார்த்து மிரண்டு போய் விட்டேன். இந்த படத்துக்காக நீங்கள் ஒரு 2 முதல் 3 வருடங்கள் உழைத்து இருப்பீர்களா என அக்‌ஷய் குமார் கேட்க, 16 வருடங்கள் என பிருத்விராஜ் சொன்னதும் அக்‌ஷய் குமார் 16 வருஷமா என அப்படியே ஆடிப் போய் விட்டார்.

ஒரு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க இத்தனை ஆண்டுகள் உழைத்திருக்கும் உங்களுடைய உழைப்புக்காகவே இந்த படம் வெற்றியடையும், என்னுடைய ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்த்து சப்போர்ட் செய்வார்கள் என அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆக்சன் ரூட்டுக்கு மாறி மொக்கையான பரத்!.. வாய்ப்புக்காக வில்லனாக மாறிய சோகம்….

2010ம் ஆண்டு இந்த படத்தின் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நிலையில், அதன் பின்னர் படப்பிடிப்புத் தொடங்கி பல தடைகளை தாண்டி 16 வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி சவுண்ட் மிக்சிங் செய்திருக்கிறார்.

 

Related Articles

Next Story