24/7 சரக்கில் மிதந்த பிரபல நடிகர்- அதனால்தான் அவரது மார்க்கெட்டே காலியானது தனி கதை...

Vishal
தமிழ் திரையுலகை பொருத்தவரை சரக்கு அடிக்காத நடிகர்களை இல்லை என்று கூறலாம். இதற்கு பல்வேறு வகையான காரணங்கள் கூறப்பட்டாலும் இதன் மூலம் திரை உலக வாய்ப்புகளை இழந்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஆரம்பத்தில் திரைப்படத்தில் பட்டையை கிளப்பி வந்த சிக்ஸ் பேக் விஷாலும் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதின் காரணத்தினால் தான் தற்போது அதிக திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை இழந்து இருக்கிறார்.

Vishal
மேலும் சிம்புவுக்கு அடுத்தபடியாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்தில் வராமல் பலருக்கும் டேக்கா கொடுக்கக்கூடிய வகையில் இவர் நடந்து வருவதாக திரை உலக வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகர் சங்க செயலாளர் ஆக வலம் வந்த விஷால் இப்படியா? என்று பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
யார் அந்த காலகட்டத்திலேயே விஷாலுக்கு பொடி பழக்கம் இருந்ததாகவும் திரை துறையில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக சற்று அடக்கி வாசித்திருக்கிறார் அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட வெற்றியை அடைந்த பிறகு இவரால் இவரின் ஆசையை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
மேலும் பண பலமும் அரசியல் பலமும் இவருக்கு அதிகளவு செல்வாக்கை கொடுத்ததின் விளைவாக அதிகளவு குடிக்க ஆரம்பித்து விட்டார்.

Vishal
இதன் விளைவாகத்தான் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குறித்த நேரத்தில் செல்லாமலும் எதையும் பொருட்படுத்தாமலும் இருந்ததின் விளைவாக தற்போது தனது திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய நிலைக்கு வந்துவிட்டார்.
எனினும் சில நடிகர்கள் உதாரணமாக ரஜினிகாந்தில் இருந்து சிம்பு வரை குடிக்கு அடிமையாகி அதன் பின் அதிலிருந்து வெளிவந்து தற்போது திரையுலகை ஆண்டு வருகிறார்கள்.
அந்த வரிசையில் விஷாலும் இடம் பிடிக்க மாட்டாரா என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் இதை உணர்ந்தாவது அவர் இந்த தீய பழக்கத்திலிருந்து வெளிவந்து மீண்டும் திரைகடகில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.