அட்லியை டீலில் விட்ட அல்லு அர்ஜூன்!.. இவங்கள நம்பவே கூடாது!.. அப்ப அவர்தான் ஹீரோவா?...

தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் அட்லி. இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இவர் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் வெற்றியடையவே விஜயை வைத்து மெர்சல், தெறி, பிகில் என 3 படங்களை இயக்கினார்.

ஏற்கனவே தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் உருவாகி பெரிய வெற்றியை பெற்ற படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி படமாக எடுக்கிறார் என்கிற புகார் இவர் மீது உண்டு. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். விஜயை வைத்து 3 படங்களை இயக்கியதால் பாலிவுட்டிலிருந்து ஷாருக்கான் அழைத்தார்.

இதையும் படிங்க: சத்யராஜ் செய்த அந்த உதவி… இப்படியும் ஒரு வள்ளலா என புகழ்ந்து தள்ளிய இயக்குனர்

அப்படி பாலிவுட்டுக்கு போய் அட்லி இயக்கிய திரைப்படம்தான் ஜவான். இந்த படம் 1200 கோடியை வசூல் செய்து சாதனை படைக்கவே அட்லி இந்திய அளவில் பெரிய இயக்குனராக மாறிவிட்டார். விஜய் அடுத்த நடிக்கவுள்ள படத்தையும் அட்லியே இயக்குவார் என செய்திகள் வெளியானது.

ஆனால், விஜய் இல்லை.. புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூனை அட்லி இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்தது. திடீரென, அல்லு அர்ஜூன் இல்லை.. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்தான் அட்லியின் இயக்கத்தில் நடிக்க போகிறார் எனவும் சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: மலையாள நடிகர்.. பாலிவுட் நடிகை!.. அடுத்த படத்துக்கு பக்கா ஸ்கெட்ச் போடும் சூர்யா…

இதில் எது நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. இதற்கிடையில் அட்லியின் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் ஆசைப்பட்டாலும் தெலுங்கு பட இயக்குனர் திரி விக்ரம் அழைத்தால் அவருக்கே முன்னுரிமை கொடுப்பார் எனவும், அட்லியை டீலில் விடுவார் எனவும் சொல்லப்படுகிறது.

எனவே, அட்லி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருபக்கம், விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது ஹெச். வினோத் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story