Connect with us

Cinema News

நானும் தான் லஞ்சம் கொடுத்தேன்.. விஷாலை தொடர்ந்து களத்தில் குதித்த ஹிட் நடிகர்..!

Vishal: மார்க் ஆண்டனி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்க லஞ்சம் கொடுத்ததாக விஷால் வீடியோவாக வெளியிட்டு புகாரை பதிவு செய்தார். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து இருக்கும் நிலையில், தற்போது பிரபல நடிகர் ஒருவரும் இந்த பிரச்னை குறித்து பேசி இருக்கின்றார்.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால் இணைந்து நடித்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் போனில் டைம் டிராவல் செய்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும். சயின்ஸ் பிக்‌ஷன் கதை என்றாலே ரசிகர்கள் ஏராளம் தான்.

இதையும் படிங்க: நெல்சனுக்கு ஏன் இந்த விபரீத ஆசை! எல்லாம் ‘ஜெயிலர்’ வெற்றிதானா? கொஞ்சம் பாத்து பண்ணுங்க பாஸ்

இதனால் மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் மட்டுமே 100 கோடியை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. தொடர்ச்சியாக படத்துக்கு ஆதரவு பெருகி கொண்டே தான் செல்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு வரவேற்பு வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தினை வெளியிட 6.5 லட்சம் சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுத்தேன். இதில் அதிகாரிகளுக்கு 3 லட்சமும், 3.5 லட்சம் சான்றிதழ் கொடுக்கவும் என பகிரங்கமாக வீடியோவில் தெரிவித்து இருந்தார். இந்தப் பிரச்னையை மத்திய அரசு விசாரித்து வருகிறது.

இதையும் படிங்க: லியோ ப்ளாப் ஆகிடுமா அப்போ?… அடேய் உங்க லாஜிக்குல மண்ணை போட… கடுப்படிக்கும் விஜய் ரசிகர்கள்!

இதே நேரத்தில் சமுத்திரகனியும் பேட்டி ஒன்றில் அப்பா படத்திற்கு வரிவிலக்கு பெற லஞ்சம் கொடுத்தேன். ஆனால் சென்சார் போர்ட்டுக்கு இதுவரை காசு கொடுத்தது இல்லை எனத் தெரிவித்து இருக்கிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்பா திரைப்படம் 2016ம் ஆண்டு திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தை சமுத்திரக்கனி எழுதி இயக்கினார்.  தம்பி ராமையா, கேப்ரியலா, யுவா ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top