More
Categories: Cinema News latest news

அய்யய்யோ ஆளவிடுங்க!.. எனக்கும் அந்த தயாரிப்பாளருக்கும் சம்மந்தமே இல்லை!.. அலறியடித்த அமீர்!

கடந்த 3 ஆண்டுகளாக 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய கும்பலுக்கும் அமீர் படத்தின் தயாரிப்பாளருக்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனே அவர் தான் என பரபரப்பு பற்றிக் கொண்ட நிலையில், அமீர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமீர் நடிப்பில் உருவாகி வரும் இறைவன் மிகப்பெரியவன் படம் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. சமீபத்தில், பருத்தி வீரன் பிரச்சனையில் பலரும் அமீருக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், தற்பொது ஜாபர் சாதிக் பிரச்சனையில் அமீருக்கு எதிரான கருத்துக்களை சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் போட்டு கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: கோலிவுட்ல ஒரு கேம் ஆஃப் த்ரோன்ஸா?.. விஷுவல்ஸ் மிரட்டுதே!.. சிம்பு புது வீடியோ பார்த்தீங்களா? ..

ஜாபர் சாதிக்கின் பணத்தில் தான் இறைவன் மிகப்பெரியவன் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. என்ன காரணம் என்றே எனக்கு தெரியவில்லை. மீடியாக்கள் மூலமாகத்தான் விஷயத்தை அறிந்துக் கொண்டேன்.

தயாரிப்பாளர் என்பதை தாண்டி அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜாபர் உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால், சட்டத்தின் கரங்கள் அதற்கான வேலைகளை பார்க்கட்டும். இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுபவர்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற மாட்டேன் என தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவரது கூட்டாளி எல்லாம் நான் கிடையாது என அமீர் தன் மீது கிளம்பிய விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய்க்கு இருக்கிற தைரியம் எனக்கு இல்ல.. இவ்வளவு ஃபிராங்கா சொல்லிட்டாரே பிரசாந்த்!

Published by
Saranya M

Recent Posts