பெண்களுக்கு மட்டும் தான் அட்ஜெஸ்ட்மெண்டா…! பிரபல இயக்குனரையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வற்புறுத்திய சம்பவம்…

Published on: September 26, 2022
ameer_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனையை பாரதிராஜாவுக்கு அடுத்தபடியாக தன் பாணியில் கொடுக்க நினைத்தவர் இயக்குனர் அமீர். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் இப்போது கலக்கி வருகிறார்.

ameer1_cine

வடசென்னை படத்தில் இவரின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது. மேலும் இவரின் படைப்புகளில் குறிப்பிடும் படியாக அமைந்த படம் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி ஒரு ஹீரோவாக அறிமுகமானார்.

ameer2_cine

இந்த படத்தின் மூலம் தான் அவரை தமிழ் சினிமா அன்னாந்து பார்த்தது. அப்படி பட்ட படைப்பை கொடுத்தவர் அமீர். இவரை சமீபத்தில் பேட்டி ஒன்றில் சந்தித்த பொழுது அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசினார். அதாவது நான் பார்த்த 100 பேரில் 20 பேரை மட்டும் தான் என்னால் தக்கவைத்துக் கொள்ளமுடிந்தது. காரணம் என்னுடன் ஒத்துப்போகாமை, என்னோட குணம் இதெல்லாம் சில பேருக்கு புடிக்காமல் போனதால் தான் அவர்கள் என்னை விட்டு போய்விட்டார்கள் என்று கூறினார்.

ameer3_cine

மேலும் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை ஒரு இரவு நேரத்தில் என்னிடம் நீ கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி போ என்று கூறினார். உடனே நான் கேட்டேன். நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பத்தி பேசுனா அது வேற. என்னிடம் எதை அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றீங்கனு கேட்டேன். அதன் பிறகு தான் புரிந்தது நடிகர்களிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணி போக சொல்றாங்கனு.அவர்கள் சொல்றத கேட்க சொல்றாங்கனு. என்று கூறினார் அமீர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.