அஞ்சலியா இருக்கப்போய் தான் முடிஞ்சிது… இதுவே அந்த ஹீரோயினா இருந்தா? செஞ்சிருப்பாங்க… விளாசும் பிரபலம்!..

Anjali: பாலகிருஷ்ணா மேடையில்  அஞ்சலியை தள்ளிவிட்ட விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், இதுவே வேறு நடிகை இருந்தால் இந்த பிரச்னை என்ன நிலைமைக்கு சென்று இருக்கும் எனவும் பிரபல விமர்சகர் பொறிந்து தள்ளி இருக்கிறார். பட புரோமோஷன் நிகழ்ச்சியில் நிற்க வைக்கும் போது பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளி விடுவார். இருந்தும் அஞ்சலி சிரித்துகொண்டு சமாளித்தார். பலரும் பாலகிருஷ்ணா மீது தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அஞ்சலி கூட ஒருநாள் கழித்தே பாலகிருஷ்ணா என்னையும் மதிக்கிறார். நான் அவரை மதிக்கிறேன் […]

By :  Akhilan
Update: 2024-05-31 05:57 GMT

Anjali: பாலகிருஷ்ணா மேடையில் அஞ்சலியை தள்ளிவிட்ட விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், இதுவே வேறு நடிகை இருந்தால் இந்த பிரச்னை என்ன நிலைமைக்கு சென்று இருக்கும் எனவும் பிரபல விமர்சகர் பொறிந்து தள்ளி இருக்கிறார்.

பட புரோமோஷன் நிகழ்ச்சியில் நிற்க வைக்கும் போது பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளி விடுவார். இருந்தும் அஞ்சலி சிரித்துகொண்டு சமாளித்தார். பலரும் பாலகிருஷ்ணா மீது தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அஞ்சலி கூட ஒருநாள் கழித்தே பாலகிருஷ்ணா என்னையும் மதிக்கிறார். நான் அவரை மதிக்கிறேன் எனவும் விளக்கம் கொடுத்தார்.

இதையும் படிங்க: லட்சத்துக்கே நடிப்பை கொட்டுவாரு… இதுல கோடியா? கருடன் படத்தில் வைரலாகும் சூரியின் சம்பளம்…

இதுகுறித்து திரை விமர்சகர் அந்தணன் கூறுகையில், பாலகிருஷ்ணா மேடையில் இப்படி நடந்து கொள்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் பல முறை இப்படி நாயகிகளிடம் நடந்து கொண்டு இருக்கிறார். அஞ்சலி இந்த இடத்தில் இருந்ததால் தான் பிரச்னை பெரிதாகவில்லை. இதுவே கங்கனா ரணாவத் மாதிரியான நடிகைகள் இருந்தால் வசமாக செஞ்சிவிட்டு தான் சென்று இருப்பார்கள்.

ஹீரோக்களாக இருந்தாலும் அவர்கள் அளவுக்கு குறைந்தவர்களை அடித்து சாதித்துவிட்ட மாதிரி சீன் போட கூடாது. அஞ்சலி மாதிரி நாயகிகளை அடித்து விட்டு பெருமைப்பட்டு கொள்கின்றனர். ஆந்திராவில் பெரிய அளவு இந்த பிரச்னை மாறிவிட்டது. ஆந்திராவில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் கூட இந்த விஷயத்தில் அதிருப்தியில் இருக்கின்றனராம்.

இதையும் படிங்க: ஒத்த வெற்றிக்காக ஏங்கும் முன்னணி நடிகர்… தனிஒருவனை கொடுத்த மோகன்ராஜா… தட்டிவிட்டு மொக்கை வாங்குறாரே!..

தமிழகத்திலும் அஞ்சலியால் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அஞ்சலி ஆந்திராவில் கொடிக்கட்டி பறந்து வருகிறது. பத்து வருஷம் முன்னதாகவே அஞ்சலி, பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் இணைந்து இருக்கிறார். அதன்பின்னரே இருவருக்கும் நட்பு இருப்பதால் அஞ்சலி இந்த விஷயத்தினை வளரவிட கூடாது என்ற முடிவில் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Tags:    

Similar News