இந்த பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்தா?.. இப்படியொரு கேஸ்ல மாட்டியிருக்காரே ஸ்ரீகாந்த்!..

by SARANYA |   ( Updated:2025-06-23 08:26:31  )
இந்த பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்தா?.. இப்படியொரு கேஸ்ல மாட்டியிருக்காரே ஸ்ரீகாந்த்!..
X

அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் என்பவரிடம் இருந்து போதை பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாந்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இச்செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் ஏப்ரல் மாதம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் கே.ரங்கராஜ் இயக்கத்தில் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் படம் வெளியாகி படுதோல்வியை அடைந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பிரதீப் குமார் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெங்களுரில் இருக்கும் க்ளப் ஒன்றில் இருந்து நஜிதா என்பவரிடம் போதை பொருட்களை வாங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்பனை செய்துள்ளார். மேலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் என்பவரும் போதை பொருட்களை விற்பனை செய்து வந்ததாக வாக்கு மூலம் அளித்திருந்தார்.

அதை தொடர்ந்து ஜான் என்பவரையும் கைதி செய்துள்ளனர். இவர்களிடம் பெற்ற வாக்கு மூலம் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்தும் இந்த வழக்கில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையில் அவர் வீட்டை சோதனை செய்த போது எந்த போதை பொருளும் கிடைக்காததால் அவரை ரத்த பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Next Story