கையை விரித்த தயாரிப்பாளர்கள்!. சம்பளத்தை குறைத்த அஜித்!.. ஏகே-வுக்கு இது தேவையா?!...

Ajithkumar: கடந்த சில வருடங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உள்ள பெரிய நடிகர்களின் சம்பளம் எல்லாம் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் பெரும்பாலான படங்கள் பேன் இண்டியா வகையில் உருவாகி வருகிறது. அதாவது தெலுங்கில் எடுக்கப்பட்டு அது தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அதில் அதிக வசூல் வருவதால் பேன் இண்டியா நடிகர்களின் சம்பளமும் அதிகரித்துவிட்டது.
அல்லு அர்ஜூன், ராம் சரண், பிரபாஸ், கேஜிஎப் யாஷ் போன்றவர்களின் சம்பளமெல்லாம் இப்படித்தான் உயர்ந்தது. அவர்களாவது பேன் இண்டியா நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனால், ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களெல்லாம் இன்னும் பாகுபலி போலவோ, கேஜிஎப் போலவே ஒரு சூப்பர் ஹிட் பேன் இண்டியா படத்தை கொடுக்கவில்லை.
ஆனால், சம்பளத்தை மிகவும் அதிகமாகவே கேட்கிறார்கள். இவர்களுக்கு இடையே ‘யாருக்கு அதிக சம்பளம்?’ என்கிற போட்டியே நடக்கிறது. கோலிவுட்டை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். ஏனெனில், இவரின் படங்கள் 400 கோடிக்கும் மேல் வசூலை பெறுகிறது. தற்போது நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் அவருக்கு 225 கோடி சம்பளம் என சொல்லப்படுகிறது.
ஆனால், அஜித்தெல்லாம் தொடர் வெற்றியை கொடுக்கும் ஒரு நடிகர் இல்லை. ஆனாலும், விஜயின் சம்பளத்தில் 60 சதவீதம் கேட்கிறார். ‘விஜய்க்கு கொடுக்கும்போது எனக்கும் கொடுங்கள்’ என்பதே அஜித்தின் பார்வையாக இருக்கிறது. அஜித்தின் விடாமுயற்சி படம் ஓடவில்லை. அதேபோல், குட் பேட் அக்லி படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு 70 கோடி நஷ்டமே ஏற்பட்டது.
இந்நிலையில்தான், ஆதிக் ரவிச்ச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்திற்கு அஜித் தரப்பில் 180 கோடி சம்பளம் கேட்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முடியாது என கைவிரித்துவிட்டது. எனவே, ஏஜிஎஸ், சன் பிக்சர்ஸ், வேல்ஸ் இண்டர்நேஷனல் உள்ளிட்ட 5 தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசி இருக்கிறார்கள். அஜித் சொன்ன சம்பளத்தையும் படத்தின் பட்ஜெட்டையும் கேட்டுவிட்டு அவர்கள் எல்லோருமே முடியாது என சொல்லிவிட்டனர்.
கடைசியாக மீண்டும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடமே அஜித் தரப்பு பேசியிருக்கிறது. அஜித்துக்கு 100 கோடி மட்டுமே சம்பளமாக கொடுப்போம் என அவர்கள் சொல்ல, அஜித் தரப்பு இறங்கி வந்து 130 கோடி என பேசி முடித்திருக்கிறார்களாம். அனேகமாக இது இறுதி செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.