Code Word-ல் பேசியது என்ன?!.. போலீசாரிடம் வசமாக சிக்கிய நடிகர் கிருஷ்ணா!....
Actor Krishna: கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறைக்கு சென்ற சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விசாரணையில் ஸ்ரீகாந்த் மட்டுமுல்ல. நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட பலரின் பெயரும் இதில் அடிபடுகிறது. ஸ்ரீகாந்த் இப்போது சிறையில் இருக்கிறார்.
விரைவில் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவுள்ளனர். குடும்பத்தில் பிரச்சனை இருக்கிறது. மகனை பார்த்துக்கொள்ள வேண்டும் என பல காரணங்களை நீதிமன்றத்தில் சொல்லி ஜாமீன் கேட்டு காத்திருக்கிறார் ஸ்ரீகாந்த். ஒருபக்கம், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் சப்ளை செய்த பிரசாத் என்பவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
நடிகர் கிருஷ்ணாவை போலீசார் விசாரணை செய்ய முயன்றபோது அவர் கேரளாவுக்கு ஷூட்டிங் சென்றிருந்தார். அதோடு, செல்போனை சுவிட்ச் ஆப் செய்து அவர் தலைமறைவானதாகவும் செய்திகள் வெளியானது. எனவே, அவரை பிடிக்க 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.
நேற்று இரவு அவர் சென்னை வந்தார். பெசண்ட் நகரில் உள்ள அவரின் வீட்டில் விடிய விடிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதோடு, அவரின் ரத்த மாதிரியும் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதில் அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும், போதை மருந்து விற்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் ஆகியோரிடம் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற ரீதியில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏனெனில், ஸ்ரீகாந்துடன் இவர் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார். மேலும், கொக்கைன் சப்ளை செய்தவரும் கிருஷ்ணாவின் பெயரை சொல்லியிருக்கிறார்.
போலீசாரின் விசாரணையில் தனக்கு இரைப்பை பிரச்சனை இருப்பதாகவும், அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு வரும் எனவும், கொக்கைன் போன்ற போதைபொருளை பயன்படுத்தும் அளவுக்கு தன்னுடைய உடல்நிலை இல்லை என வாக்குமூலம் அளித்ததோடு மருத்துவ சான்றிதழ்களையும் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார்.
அதேநேரம் கிருஷ்ணா தனது நண்பர்கள் சிலரிடம் Code Word-ல் பேசியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். எனவே, 2020ம் வருடம் முதல் அவரின் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். Code Word-க்கு என்ன அர்த்தம்?.. போதைபொருள் விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்றெல்லாம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த விசாரணைக்கு பின் அவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.