காசுக்காக அண்ணனை தூக்கி எறிந்த சர்ச்சை பிக்பாஸ் போட்டியாளர்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 7 பெரிய அளவில் சொதப்பியது

By :  Akhilan
Update: 2024-10-06 13:57 GMT

BiggbossTamil: பிக்பாஸ் தமிழ் சீசன் தொடங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் முக்கிய போட்டியாளர் குறித்த சர்ச்சை விஷயம் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன்களில் பெரும்பாலும் ஆண் போட்டியாளர்களே அதிகளவில் புகழை பெறுவார்கள். அது பாசிட்டிவ்வாக இருந்தாலும் சரி. நெகட்டிவாக இருந்தாலும் சரி. அந்த அளவில் கடந்த சீசன் மட்டுமே விதிவிலக்காக அமைந்தது.

நடிகை மாயா கிருஷ்ணன் மற்றும் பூர்ணிமா ரவி இருவரும் இணைந்து விளையாடினார்கள். கிட்டத்தட்ட சீசன் வில்லி ரேஞ்சில் ரசிகர்கள் கடுப்பாக தொடர்ச்சியாக விமர்சித்தனர். அதிலும் பிரதீப் ஆண்டனியை திட்டம் போட்டு வெளியேற்றி மொத்த ரசிகர்களிடமும் பிரச்னையை சேர்த்து கொண்டனர்.

தொடர்ந்து இருவரும் வெல்லாமல் வெளியேறினர். தற்போது பூர்ணிமா மற்றும் மாயா சினிமாக்களில் பிஸியாக இருக்கின்றனர். அதிலும் பூர்ணிமா யூட்யூபில் இருந்து போராடி தான் சினிமா வரை சென்று இருக்கிறார். தன்னுடைய அண்ணன் குடும்பத்தை பார்த்து கொண்டதாகவும் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில் பூர்ணிமா ரவியின் அண்ணன் கிஷோர் ரவி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில், முன்னாள் பிபி7 போட்டியாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். காசுக்காக உன் ரத்த சொந்தத்தையே தூக்கி எறியாதே. இப்போ உன்னை சுற்றி இருப்பவர்கள் காசுக்காக தான் உள்ளனர்.

அது காலியான பின்னர் உன்னை தூக்கி எறிந்துவிடுவார்கள். உனக்கு ஒருநாள் கண்டிப்பாக புரியும். ரத்த பந்தத்தை விட காசு எப்போதுமே முக்கியம் இல்லை. முன்னாள் பிபி7 போட்டியாளர் குறித்து என்னிடம் கேட்காதீர்கள். நான் அவருடன் பேசுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.




 




 


Tags:    

Similar News