யாரு பெத்த புள்ளையோ இப்படி இருக்காரு!.. குபேரா இயக்குனர் பற்றி மேடையில் பேசிய தனுஷ்!..

By :  MURUGAN
Published On 2025-06-18 08:16 IST   |   Updated On 2025-06-18 08:16:00 IST

Kubera Dhanush: தெலுங்கில் சில நல்ல படங்களை இயக்கியவர் சேகர் கம்முலா. இவரின் படங்களுக்கென்றே அங்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இப்போது குபேரா எனும் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். குபேராஒரு சமூக படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். எனவே, இப்படம் தொடர்பான புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. தனுஷும் பல ஊர்களுக்கும் போய் இப்படம் பற்றி பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த விழாவில் பேசிய தனுஷ் ‘இயக்குனர் சேகர் கம்முலா கோவிட் நேரத்தில் வீடியோ காலில் 20 நிமிடம் எனக்கு கதை சொன்னார். அதன்பின் 2 வருடங்கள் காணாமல் போய்விட்டார். கதை, திரைக்கதையை எழுதிக்கொண்டே இருந்தார். முழுவதுமாக முடித்துவிட்டு என்னிடம் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


கதை நன்றாக இருந்தாலும் இதை இவரால் இயக்க முடியுமா என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. அவரைப்பற்றி விசாரித்தபோது இவர் மிகச்சிறந்த இயக்குனர் என பலரும் பில்டப் செய்தார்கள். நான் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால், சேகர் கம்முல்லா போல ஒரு இயக்குனரை பார்த்தது இல்லை.

மிகவும் நல்லவராக இருக்கிறார். அவ்வளவு இன்னசண்ட். இவருக்கு மனசு மிகவும் சுத்தம், இவரை பார்க்கும் போதெல்லாம் ‘யாரு பெத்த புள்ளையோ இப்படி இருக்காறே.. சினிமாவில் இவர் எப்படி சர்வைவ் பண்றார்’ என எனக்கு தோன்றும். அவருடன் பழகியதும், அவர் இயக்கத்தில் நடித்ததும் எனக்கு பெருமை. அவரை நம்பி போனதற்கு திருப்பதியில் பிச்சை எடுக்க வைத்தார். ஆனால், அப்போதுதான் வாழ்க்கை புரிந்தது’ என பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News