எனக்கே அவர பார்த்தா பயமா இருக்கு!.. ரஜினி மிரண்டு போன அந்த நடிகர்..

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். ஜெயிலர் ஹிட்டுக்கு பின் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். முன்பெல்லாம் ரஜினிக்கு வருடத்திற்கு ஒரு படம் வெளியாகும். இப்போது அடுத்தடுத்து படங்களை புக் செய்து நடிக்க துவங்கிவிட்டார்.

ரஜினியின் சில படங்கள் பெரிய வெற்றியை பெறாத நிலையில், ஜெயிலர் படம் அவரின் திரை வாழ்வில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அந்த படம் 500 கோடியை தாண்டி வசூல் செய்தது. நெல்சனுக்கும் இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதே அப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது.

இந்த படத்திற்கு பின் ரஜினி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் வேட்டையன். ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பஹத்பாசி. ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துர்ஷா விஜயன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

லைக்கா தயாரித்துள்ள இந்த படம் வருகிற அக்டோபார் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய ரஜினி பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். பஹத்பாசில். ராணா, இயக்குனர் ஞானவேல், அனிருத் பற்றியெல்லாம் பேசினார்.


ராணாவை பற்றி பேசும்போது ‘இயக்குனர் இந்த படத்தில் சத்யதேவ் என்கிற கதாபாத்திரம் இருக்கிறது. சிவாஜி சார் இருந்திருந்தால் அதில் நடித்திருப்பார். இப்போது அமிதாப்பச்சன் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க 2 நாட்களில் அவர் சம்மதம் சொல்லிவிட்டார் என சொன்னதும் எனக்கு தூக்கிவாரி போட்டது.

அதேபோல், வில்லன் யார் என கேட்டபோது ராணா என சொன்னார். ராணாவை வில்லனாக பார்க்கும்போது எனக்கே பயம் வந்தது. அவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்’ என பாராட்டியிருக்கிறார் ரஜினி.

Admin
Admin  
Related Articles
Next Story
Share it