நம்பி வந்ததேன்! 18 லட்சம் பணத்தை ஏமாற்றிய ராதிகா.. புலம்பும் நடிகை..
radhika
80களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ராதிகா. ஒரு பக்கம் பழம்பெரும் நடிகரான எம்.ஆர். ராதாவின் மகள் என்று பேர் இருந்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் நடிப்பு இளவரசி என்ற பெயரை தனதாக்கிக் கொண்டார். குறிப்பாக கிழக்கு சீமையிலே திரைப்படம் ராதிகாவின் கெரியரை உச்சத்திற்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது. அதை போல் ரஜினி படத்தில் இட்லி கொடுப்பது மாதிரியான காமெடி காட்சியிலும் பட்டையை கிளப்பியிருப்பார்.
செண்டிமெண்ட்டா? காமெடியா? ரொமாண்டிக்கா? எந்த ஐட்டம் வேண்டும்? எல்லாமே ராதிகாவிடம் அத்துப்புடி. நடிகையாக பல ஆண்டுகள் சர்வே செய்து வந்த ராதிகா அடுத்து தயாரிப்பிலும் களமிறங்கினார். குறிப்பாக தன்னுடைய ராடன் நிறுவனம் மூலம் ஏராளமான சின்னத்திரை தொடர்களை தயாரித்தார். அவருடைய தயாரிப்பில் பல சீரியல்கள் வெற்றித்தொடர்களாக மாறின.
இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் ராதிகாவின் சீரியலில் நடிக்க அந்த சீரியலில் நடித்ததற்காக அந்த நடிகைக்கு தர வேண்டிய 18 லட்சம் சம்பளத்தை இன்னும் கொடுக்கவில்லையாம். இதை பற்றி ஒரு பேட்டியில் அந்த நடிகை பேசியிருக்கிறார். அவர் வேறுயாருமில்லை. பிரபல குணச்சித்திர நடிகை விஜி சந்திரசேகர். பெரும்பாலான படங்களில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
முதல் மரியாதை படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக வருவார். சமீபத்தில் கூட மாமன் திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு இணையாக நடித்திருப்பார். இவர்தான் ராதிகாவை பற்றி இப்படி பேசியிருக்கிறார். அதாவது ராதிகா நடித்துக் கொண்டிருந்த ஒரு சீரியலின் நேரம் மாற்றப்பட்டதாம். அதனால் அந்த சீரியலில் ராதிகாவால் நடிக்க முடியவில்லையாம். அவருக்கு பதிலாக விஜி சந்திரசேகரை நடிக்க சொல்லியிருக்கிறார்கள்.
முதலில் விஜி முடியாது என சொல்லியிருக்கிறார். எனக்காக நடிக்க கூடாதா என ராதிகா தரப்பில் கேட்க ராதிகாவுக்காக நடிக்க ஒப்புக் கொண்டாராம். சரியாக ஒரு மாதம் தான் அந்த சீரியலை மேலும் தொடர முடியாத சூழ்நிலை. அதுதான் கடைசி சூட்டிங் என தெரியாமலேயே விஜி சந்திரசேகர் சூட்டிங்கிற்காக சென்றிருக்கிறார். ஆனால் மற்ற துணை நடிகர்களுக்கெல்லாம் இதுதான் கடைசி சூட்டிங் என தெரிந்திருக்கிறது.
viji
அன்று முடிந்ததும் அந்த சீரியலையே அப்படியே நிறுத்திவிட்டார்களாம். இதில் விஜிக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சம் பாக்கி இருக்கிறதாம். இப்போ தருகிறேன்.. அப்போ தருகிறேன் என இதுவரை கொடுக்கவில்லையாம். கர்மா என ஒன்று இருக்கிறது என விஜி பொறுமையாக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்.