நாங்க வெறும் பொம்மைதான்.. அதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது! போல்டா சொன்ன அஜித்
ajith
இன்று ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி படம் மாபெரும் ப்ளாக் பஸ்டர் படமாக மாற சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்டிங்காக மாறினார். இன்னொரு பக்கம் ரேஸில் மிகவும் பிஸியாக இருக்கிறார். குட் பேட் அக்லி படத்திற்கு முன்பு அஜித்தின் விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது.
இந்தப் படத்தில் ஏன் அஜித் நடித்தார்? கதை கேட்டாரா இல்லையா? என்றெல்லாம் அஜித்தை பற்றி பலரும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். ஒரு படம் வெற்றியடைந்தால் இயக்குனர் தான் காரணம் என்று சொல்கிறோம். ஆனால் படம் தோல்வியடைந்தால் ஏன் அந்தப் படத்தில் நடித்த நடிகரை சொல்கிறோம்? இதை பற்றி பழைய பேட்டி ஒன்றில் அஜித் விளக்கமாக கூறியிர்க்கிறார். இதோ அவர் கூறியது:
டைரக்டர் தான் ஒரு கேப்டன். ஆசை, காதல் கோட்டை அல்லது வெற்றியடைந்த மற்ற படங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரே காரணம் டைரக்டர்தான். அதை நான் ஒத்துக் கொள்கிறேன். நாங்கள் வெறும் பொம்மைகள்தான். ஒரு கேரக்டரை மோல்டு செய்வதே டைரக்டர்தான். அப்படிப்பார்த்தால் 1996களில் வெளியான வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, மைனர் மாப்பிள்ளை போன்ற படங்களுக்கு கதை கேட்காமல்தான் ஒத்துக்கிட்டேன்.
சினிமாவை பொறுத்தவரைக்கும் நான் ஒரு நடிகன், கதை கேட்டு ஒரு டைரக்டர் கிட்ட கரெக்ஷன் சொல்ற அளவுக்கு எனக்கு அறிவு இருந்தால் நான் ஏன் நடிகனாக போறேன். டைரக்டராகத்தான் போவேன். அது இயக்குனரின் பொறுப்புதான். ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்துவது எல்லாம் வேறு. நான் ஒரு நடிகன். ஒரு படம் வெற்றியடைந்தால் மட்டும் சம்பந்தப்பட்ட டைரக்டரை பாராட்டுறோம்.
ஆனால் படம் தோல்வியடைந்தால் என்னுடைய தவறு என சொல்கிறீர்கள். அதெப்படி? அது என்னுடைய தப்பு கிடையாது. டைரக்டரோட தப்புதான். பல கோடிகளை வீசும் தயாரிப்பாளர். அவர் கதை கேட்டுவந்துதானே ஓகே சொல்லியிருப்பார். 1997ல் வெளியான நேசம், ராசி, உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, பகைவன், என இந்த ஐந்து படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியாகவில்லை.
ajith
இதுக்கெல்லாம் நான் எப்படி காரணமாக இருக்க முடியும். கதை கேட்காததால அது என்னுடைய தப்புனா கதை கேட்டு கதையை ஓகே பண்ண தயாரிப்பாளரின் தவறும் கூடதானே என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் அஜித்.