அஜீத்துக்கு ஹிட் கொடுத்த உடனேயே விஜய்க்கு கொடுத்த ஹிட்... எஸ்.ஜே.சூர்யா சொன்ன சீக்ரெட்
அஜீத்தை வைத்து வாலி படத்தை இயக்கியதும் அடுத்து விஜயை வைத்து குஷி படத்தை இயக்க என்ன காரணம்? சண்டையான்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ஆங்கர் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
அஜீத்தை வைத்து வாலி படம் பிரமாதமாகப் பண்ணியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. திறமையாளர்கள் எங்கு இருந்தாலும் தேடிக் கண்டுபிடிப்பவர் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அவர் உடனே விஜயை வைத்துப் படம் எடுக்கலாம்னு முடிவு செய்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யாவை அணுக அவரும் கதையை ரெடியாக வைத்து இருந்தார்.
அதைச் சொல்லவும் விஜய்க்கும் ரொம்ப பிடித்துவிட்டது. அதனால தான் குஷி படம் ஆரம்பித்தது. அஜீத்துக்கும், விஜய்க்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்தக் கதையை விஜய்க்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி பாரதிராஜாகிட்டயும் சொன்னாரு.
அப்போ மனோஜ்ஜைக் கதாநாயகனா ஆக்கலாம்னு அவருக்கு ஐடியா இருந்தது. எப்பவுமே கதை ஆரம்பிக்கும்போது எப்படி முடியும்னு தெரியாது. கிளைமாக்ஸ்ல தான் தெரியும். ஆனா இந்தப் படத்துல குழந்தைகளாக இருக்கும்போதே அந்தக் கதையைக் காட்டியிருப்பாங்க. அவங்க வளர்ந்ததும் கதாநாயகன், கதாநாயகியை சந்திக்கணும். எப்படி சேரப் போறாங்களா இல்லையாங்கறது தான் கதை.
டிஎன்.பாலு ஜெய்சங்கரை வைத்து நல்லதுக்கு காலமில்லைன்னு ஒரு படம் எடுத்தாரு. அந்தப் படத்தி;ன் கிளைமாக்ல வரும் பைட் டைட்டில்ல போட்டுருப்பாங்க. அதுரு டிரைலர் மாதிரி ஆச்சு. நல்ல ஒர்க் அவுட்டாச்சு. அப்போ அவரால முடிவு எடுக்க முடியாம மணிரத்னத்துக்கிட்டயும், என்னையும் கதை கேட்கச் சொன்னாரு.
அதே மாதிரி தான் இந்தக் கதையும். குஷி படத்துல அவங்க எப்படி சேரப் போறாங்கங்கறதை முதல்லயே காட்டியிருப்பாரு. ராமாயணம், மகாபாரதம் மாதிரியான கதை தான். என்னாலும், மணிரத்னத்தாலும் அன்று அந்தப் படத்தின் கதையை முடிவு பண்ண முடியலை. அன்னைக்கு அதுல விஜய் நடித்தார். அது அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.