ஏம்பா பிரச்னைனா காலர தூக்கிட்டு வருவ இப்போ பம்முற? சத்யராஜை வம்புக்கு இழுக்கும் பிரபலம்!

Sathyaraj: பொதுவாக நடிகர் சத்யராஜ் சினிமாவில் தக் லைப் காட்டுவது போல நிஜ வாழ்க்கையிலும் நிறைய சம்பவங்களை செய்து இருக்கிறார். ஆனால் தற்போது லட்டு விவகாரத்தில் அவர் எதையும் பேசாமல் இருப்பது குறித்து பிரபலம் ஒருவர் போட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் புரட்சித் தமிழன் என அழைக்கப்பட்டு வருபவர் சத்யராஜ். நக்கலான பேச்சிலும் நையாண்டி கலாய்களுக்கும் பெயர் போனவர். சினிமாவில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் தனக்கு என்ன தோன்றுகிறது என்பதை பொது மேடையில் கூட அப்பட்டமாக பேசுவது சத்யராஜின் வழக்கம்..

பெரியாரைப் பின்பற்றும் சத்யராஜ் அவர் வழியில் பேசியது நிறைய முறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் காவிரி பிரச்சினைகள் அவரின் கருத்து வைரலானது. அந்த சமயத்தில் அவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என கர்நாடகா தொடர்ந்து பிரச்சினை செய்தது. இதை எடுத்து அவர் பொது மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தப்பட்டது.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த பிரச்சனையில் பாகுபலி 2 ரிலீஸ் போது சத்யராஜை மன்னிப்பு கேட்க கர்நாடக அமைப்பு வலியுறுத்தியது. அப்பொழுதும் தயங்காதவர் எல்லோரும் போல நானும் கண்டனம் தெரிவித்தேன். அதில் சில வார்த்தைகள் கன்னட மக்களை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கூறுகிறேன்.

ஆனால் இனிமேலும் தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதை பிடிக்காத தயாரிப்பு குழு இந்த சின்ன நடிகனை அணுக வேண்டாம். என்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது. நடிகனாக இருப்பதைவிட தமிழனாக இருப்பதற்கு தான் பெருமை கொள்கிறேன் எனப் பேசி இருப்பார்.

ஆனால் இவ்வளவு கம்பீரமாக பேசிய சத்யராஜ் தற்போது கார்த்திக்கு எதிராக ஆந்திராவில் எழும்பி இருக்கும் எதிர்ப்பிற்கு எதுவும் வாய் கொடுக்காமல் இருக்கிறார். இது குறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பதிவில், 'ஏம்பா முன்ன எல்லாம் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை வந்தா தம் கட்டி சவுண்ட் விடுவியே. அதிரடியா நாத்திகம் பேசுடுவ. இப்போ ஏன் சைலன்ட் ஆகிட்ட? லட்டு பத்தி கருத்து சொல்லலையா? எனக் கேட்டு இப்ப நம்ம பேன் இந்தியா நடிகர். அதுவும் தெலுங்குல எதுக்கு பிரச்சனை என பம்மி விட்டதாக கலாய்த்து இருக்கிறார்.

Related Articles
Next Story
Share it