அப்போ பாட்டு தான் புரொமோஷன்... ஆனா இப்போ பாட்டுக்கே புரொமோஷன்...! அனிருத்தை வெளுக்கும் பிரபலம்
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நாகர்ஜூனா, சுருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்டு 14ல் வெளியாகிறது. இதையொட்டி படத்துக்கான புரொமோஷன் பணிகள் இப்போது இருந்தே நடந்து வருகின்றன. சிக்கிடு பாடலுக்கான மியூசிக் வீடியோ வெளியானது. இதுகுறித்தும் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் குறித்தும் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார்னு பாருங்க.
அந்தக்காலத்தில் படத்துக்கு புரொமோஷன்னா இன்று பட பூஜை ஆரம்பம்னு பெரிசா விளம்பரம் பேப்பர்ல வரும். அதுதான் புரொமோஷன். அடுத்துப் பாட்டு கேசட் வரும். ரஜினி, கமல், ராமராஜன், மோகன் படங்களோட பாடல் கேசட்டுக்கு அடிச்சிக்கிட்டு நான் நீன்னு போட்டி போட்டு வாங்குவாங்க. புதுப்பாட்டை கேசட் வந்தவுடனே கல்யாண வீடுகள், டீக்கடைகள்ல போடுவாங்க. 'பாட்டே பிரமாதமா இருக்குய்யா. படம் பிச்சிக்கிட்டு ஓடும்யா'ன்னு சொல்லி பாட்டுக்காகவே படம் பார்த்தாங்க.
இப்போ என்னன்னா பாட்டுக்கே ஒரு புரொமோஷன் கொடுக்குறாங்க. கூலியில் ரஜினிகாந்தை எதிர்பார்த்தேன். ஆனா அவரு வரல. காரை விட்டு இறங்கினதும் டப்புன்னு செயின் எடுத்துத் தோள்ல போடுறாரு. சம்பவம் பண்ணிடலாமான்னு கேட்குறாங்க.
'தம்பி ஏற்கனவே நிறைய இசையில சம்பவம் பண்ணிருக்கீங்க. அடுத்து நடிப்புலயும் பண்ணப் போறீங்க போல'ன்னு நினைச்சேன். ரஜினிக்கு வயசாச்சுங்கறதனால அவருக்குப் பதில் அனிருத்தை நடிக்க வைச்சிருக்காரு போல. சம்பவம் உறுதி தான்னு நினைச்சேன். கைக்கடிகாரத்துல உள்ள செயினையே கோர்த்து கோர்த்து தோள்ல போட்டுருக்காரு.
ஆனா இவரு அந்தளவுக்கு ஒர்த் இல்ல. ஒரு சில ஓட்டல்ல தேடிப் போயி சாப்பிடுறான். ஆனா ஒரு சில டீக்கடையைப் பார்த்த உடனே, ஒரு பேரு வச்சிருப்பாங்க. சில ஓட்டலுக்கு 'மரணவிலாஸ்'னு பேரு வச்சிருப்பான். அங்கே போனா பின்னால போயிடும்னு தெறிச்சி ஓடுவான்.
சில படங்கள் மரணவிலாஸ் மாதிரி தான். அனிருத்தே மரணவிலாஸ் மாதிரிதான் பாட்டு போட்டுக்கிட்டு இருக்காரு. சிக்கிட்டுங்கற இந்தப் பாட்டுக்கே செயினை கையில எடுத்துருக்கான்னா அடுத்து கடப்பாறையைக் கூட கையில எடுக்கலாம். துப்பாக்கியைக் கூட கையில எடுக்கலாம். ஊருல அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா ஆகலாமான்னு கேட்பாங்க. இதுதான் அனிருத்தோட நிலை.
திறமை இருந்து அந்தப் பாட்டை மக்கள்கிட்ட பிரபலப்படுத்துனா பரவாயில்லை. வரி இல்லை. ஒண்ணும் இல்லை. இதையும் தாண்டி ரஜினிகாந்த் அவரை ஏன் கூட வச்சிருக்காருன்னு தெரியல. ரஜினிகாந்தே நடிக்கலன்னா கூட அதுல இவரு இசை அமைப்பாருங்கற கண்டிஷன்ல தான் இருக்கு. பாவம் அந்த சிக்கிட்டு என்ன கண்டிஷன்ல வருதுன்னு பார்ப்போம் என்கிறார் ஆலங்குடி வெள்ளைச்சாமி.