இத்தனை நாளா இது கூட ஆர்த்தி கையில்தான் இருந்ததா? பரபரக்கும் ரவி விவாகரத்து சர்ச்சை!

Jayamravi: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை அறிவித்ததில் இருந்து சாதாரணமாக தொடங்கிய இந்த விஷயம் ஆர்த்திரவியின் அறிக்கைக்கு பின்னர் பூதாகரமாக வெடித்தது.

சமீப காலமாக முன்னணி பிரபலங்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையில் இருந்த விலகுவதாக தொடர்ச்சியாகவே அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் சில தினங்கள் முன்னர் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை அறிவித்தார். அதை ரசிகர்கள் சாதாரணமாக தான் கடந்து சென்றனர். ஆனால் அடுத்த இரண்டு தினங்களில் ஆர்த்திரவி இந்த விவாகரத்து குறித்து எனக்கு தெரியவே தெரியாது என மறுப்பு அறிக்கையை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து இந்த பிரச்சனை சர்ச்சையானது. ரவியின் விவாகரத்திற்கு ஆர்த்தியின் ஓவர் கட்டுப்பாடு தான் காரணம் என கூறப்பட்டது. படப்பிடிப்பில் இருக்கும் போது கூட அவரை சந்தேகப்பட்டு வீடியோ கால் செய்து செக் பண்ணுவதும் ஆர்த்தி செய்து கொண்டிருந்ததாக பலர் கருத்தை முன்வைத்தனர்.

ஆனால் அதையெல்லாம் ஆர்த்தி மறுத்தார். ஆனால் அடுத்த தினங்களில் நிலைமை தலைகீழாக மாறி ஜெயம் ரவி கோவாவை சேர்ந்த பாடகி ஒருவருடன் தொடர்பில் இருப்பது தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் ஆதாரங்கள் கூட முன்வைக்கப்பட்டது.

இன்று காலை பிரதர் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்னர், ரவி எனக்கு யாருடனும் தொடர்பில்லை. அப்படி ஒரு கதையை உருவாக்குபவர்கள் தான் அசிங்கப்பட வேண்டும். அந்த பெண்ணுடன் இணைந்து மன அமைதி நிலையத்தை உருவாக்குவது தான் என் எண்ணம். அந்த பொறாமையில்தான் இப்படி பேசிக்கொண்டு அலைகிறார்கள் என முதன்முதலாக இது குறித்து பேசி இருந்தார்.

இந்நிலையில், ஜெயம் ரவியின் விவாகரத்தில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்து இருக்கிறது. ஆர்த்தி ரவி இதுவரை ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை முழுமையாக பயன்படுத்தி வந்திருக்கிறார். தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்களுக்கு ரவி அதை கேட்டும் அவர் கொடுக்க முடியாது என மறுத்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சல் ஒரு கட்டத்தில் விவாகரத்தில் சென்று முடிந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து மெட்டா நிறுவனத்தை அணுகி தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஜெயம் ரவி மீட்டிருப்பதாக தற்போது ஒரு ஆதாரம் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு அடிமைத்தனமாக ரவியை ஆர்த்தி நடத்திய இருக்கிறாரா என கேள்விகளும் எழுந்துள்ளது.

Related Articles
Next Story
Share it